1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ஒட்டுமொத்த தமிழ்பேசும் மக்களின் மனதைச் சீண்டிக் கருமங்களை நிறைவேற்ற விரும்புவன் ஊடாக நாட்டை ஒற்றுமைப்படுத்த முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள யுகதனவி ஒப்பந்தம் தொடர்பில் கலந்துரையாட வருமாறு அரசாங்கத்தின் பங்காளிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (28) அழைப்பு விடுத்துள்ளார்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஜனாதிபதியால் மன்னிக்கப்பட்ட தீவிரவாத பௌத்த துறவி ஒருவரை சக்திவாய்ந்த சட்டமன்ற அமைப்பின் தலைவராக நியமித்தமைக்காக அரசாங்கத்தின் மீது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

காதலித்து திருமணம் செய்த தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி வவுனியாவில் 200 அடி உயர தொலைதொடர்பு கோபுரத்தில் ஏறி கணவன் போராட்டம் மேற்கொண்டதுடன், பொலிசார் அசமந்தமாக செயற்படுவதாக தெரிவித்து உறவினர்கள் ஏ9 வீதியை மறித்து போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

நாட்டின் இறையாண்மையுடன் விளையாட எவருக்கும் இடமளிக்கக் கூடாது என்று தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த தன்னிச்சையான நடவடிக்கைக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி இருக்கும் என்றும் வலியுறுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் மூடி மறைக்கப்படுவதாக யார் மீதும் குற்றம் சுமத்தப்பட முடியாது என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர(Sarath Weerasekara) தெரிவித்துள்ளார்.

ஆட்கடத்தல்கள், சட்டவிரோதமான தடுத்துவைப்புக்கள், சித்திரவதைகள் போன்றனவற்றப் புரிந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இலங்கை ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச உட்பட பல இராணுவ உயரதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் (International Criminal Court (ICC) இல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில், வனவளத்  திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான கலந்துரையாடலொன்று, கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில், இன்று (27) நடைபெற்றது.

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தலைமையிலான கட்சி மூன்றாவது முறையாக வெற்றிபெற்று கனடாவில் ஆட்சியமைக்கின்றது. இந்த புதிய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதுடன் புதிய அமைச்சரவை பட்டியலில் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.

ஒரே நாடு ஒரே சட்டத்திற்கான ஜனாதிபதி செயலணியை நியமித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கையொப்பமிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

கட்சி வேறுபாடுகள் இருந்தபோதிலும் குடும்பங்களை மீள்குடியேற்றுவதன் மூலம் தமிழ் மக்களை அரசியல் ரீதியாக பலவீனப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிக்கு தமிழ் கட்சிகள் பேதங்களுக்கு அப்பால் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பண்டாரவளை பிரதேச சபையின் தவிசாளர் தனக்கு தனிப்பட்ட முறையில் தெரிந்த ஒருவரை பிரதேசத்தின் காவல்துறை பொறுப்பதிகாரியாக நியமிக்க நிதி அமைச்சரின் உதவியை நாடியுள்ளார்.

ஒகஸ்ட் 3ம் திகதி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்டமையால் கைது செய்யப்பட்ட ஐவரையும் மீண்டும் நவம்பர் 9ம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்குமாறு கடுவலை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தங்கள் உரிமைகளுக்காகப் போராடிய கைதிகள் குழுவினை அடக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரமான ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான், கடந்த 2ஆம் திகதி போதைப்பொருள் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த விவகாரம் தொடர்பில் ஆர்யன்கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி