1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வெல்லவாய எல்லேவல நீர் வீழ்ச்சியில்  நீராடச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் உட்பட மூன்று பேர் இன்று (20) மாலை சடமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தவறான அறிவுறுத்தலின் பேரிலேயே இரசாயண உரம் பயன்படுத்துவதை தடை செய்யும் வர்த்தமானி வெளியிடப்பட்டதாக விவசாய அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உதித் கே ஜயசிங்க கூறுகிறார்.

வலுக்கட்டாயமாக உடலுறவுக் காட்சிகளில் நடிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படும் 50 பெண்களுக்கு பார்ன் ஹப் இணையதளத்தின் தாய் நிறுவனம் இழப்பீடு வழங்கியிருக்கிறது.

கொழும்பு துறைமுகத்தில் இறக்கப்படும் கொள்கலன்களை புகையிரதத்தில் கொண்டு செல்வது நிறுத்தப்பட்டமையால் புகையிரதத் திணைக்களம் சுமார் 12 கோடி ரூபாய் வருட வருமானத்தை இழந்துள்ளதாகத் தெரியவருகிறது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ  விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகேவிற்கு   எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்தல் காலம் நெருங்கும்போதே ராஜபக்ஷ ஆட்சி முன்னெடுத்த இனவாதத்தையும், அச்சத்தையும் தூண்டும் செய்திகள் மீண்டும் திட்டமிட்டு தயாரிக்கப்படுவதை காணக் கூடியதாக உள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின்(Mayilvaganam Nimalarajan) 21வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளின் ஆசிரியர்கள், அதிபர்கள் இன்றைய தினமும் தங்களது வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்கின்றனர்.

இரசாயண உரம் இறக்குமதியை அரசாங்கம் நிறுத்தியதன் பின்னர் அடுத்த பெரும்போகத்திற்காக இந்தியாவின் நெனோ உரத்தை இறக்குமதி செய்ய அவசரமாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் எச்சரிக்கையை பொருட்படுத்தாது வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறது.புதிய ஏவுகணை சோதனை ஒன்றை வட கொரியா செய்து பார்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கிழக்கு கரை பகுதியிலிருந்து நடத்தப்பட்ட சோதனையில் எந்த வகையான ஏவுகணை பயன்படுத்தப்பட்டது என்பது குறித்த தகவல் வெளியாகாத நிலையில், சமீப காலமாக வட கொரியா சோதனை செய்து வரும் பலிஸ்டிக் (ballistic) ஏவுகணையாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

ஊழல் குற்றச்சாட்டை மறைக்கவே, சுமந்திரன் வயலை உழத் தொடங்கினார் எனத் தெரிவித்த தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் கோ.ராஜ்குமார், அதன் பின்னர் படகோட்டம் மற்றும் உரத்தைப் பற்றி பேசுகிறார் எனவும் கூறினார்.

சீனிக்கான தட்டுப்பாடை உருவாக்கி அரசாங்கத்தினால் விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையையும் மீறி கடைகளில் சீனி விற்கப்படுவதாகத் தெரிய வந்துள்ளது.

நாளாந்தம் பெறப்படும் கடவுச்சீட்டுக்களின் (Passport) எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.ஒரு நாள் சேவையின் கீழ் சேவையை பெறுவோரின் எண்ணிக்கை 500 ஆல் அதிகரித்துள்ளதாக குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கெரவலபிட்டிய, யுகதனவி மின் நிலையத்திற்குரிய 40 வீத பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் அமைச்சரவைத் தீர்மானத்தை நிறுத்த உத்தரவிடுமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது எல்லே குணவன்ச தேரர் மற்றும் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனது மகனை திட்டமிட்டு கொலை செய்து விட்டு எங்களை தற்போது அலைய விடுகின்றனர் என,  இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின்(Viyalendran) வீட்டின் முன்னால் அவரது மெய்பாதுகாவலரால் சுட்டுக் கொல்லப்பட்ட பாலசுந்தரத்தின் தாயார் தெரிவித்துள்ளார். 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி