1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

"நாட்டில் மக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. இப்போது தவறுகளைத் திருத்திக்கொள்ளாது போனால் அடுத்த மூன்று ஆண்டுகளில் மக்களால் இந்த அரசு விரட்டியடிக்கப்படும்." என அமைச்சர் மகிந்த அமரவீர(Mahinda Amaraweera) எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு ஈரானிய பிரஜைகள் சுத்திகரிப்பான் திரவங்களை அருந்தியதனால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் ஸ்திரமற்ற தன்மை காணப்படும் பின்புலத்தில், பொது நிதி தொடர்பான முறைகேடுகள் குறித்து சட்டப்பிரிவு கரிசனை கொள்ளவேண்டியுள்ளது.

தைவான் நாட்டின் தெற்கே காவோசியங் நகரில் 13 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று உள்ளது.  இந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.

கைதிகளின் மனித உரிமைகளைப் பாதுகாக்க ஐரோப்பிய நாடாளுமன்றம் தலையிடக் கோரி வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையின் மீதேறி கைதிகள் குழு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

வடமேல் மாகாணத்தில் பிறந்து வளர்ந்த  எனக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷ, வடமேல் மாகாண முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் எனக்கு சவால் விடமாட்டார் என ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர இன்று குருநாகலில் இதனை தெரிவித்தார்.

மாகாண சபைத் தேர்தல்களை விரைவாக நடத்துவதற்குத் தேவையான சட்டத் திருத்தங்களை விரைவுபடுத்துவதற்கான தேர்தல்கள் மற்றும் தேர்தல்களின் அமைப்பு மற்றும் விதிகள் தொடர்பான சீர்திருத்தங்களை அடையாளம் கண்டு தேவையான திருத்தங்களை செய்ய நாடாளுமன்றத் தெரிவுக் குழு முடிவு செய்துள்ளது.

பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை சம்பந்தமாக குற்றஞ்சாட்டி கோஷிலா ஹன்ஸமாலி பெரேராவை சிறையிலடைத்திருப்பது நியாயமற்ற செயலாகுமென்பது நேற்று (12) கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொடவுக்கு எதிராக, தாக்கல் செய்யப்பட்ட அதி குற்றச்சாட்டுப் பத்திரத்தை மீளப்பெற தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இன்று அறிவித்தார்.

ஆசிரியர் அதிபர் சம்பளப் பிரச்சினை சம்பந்தமாக முன்னெடுக்கப்படும் ஆசிரியர் – அதிபர் வேiலை நிறுத்தத்திற்கு தீர்வு வழங்குவது எப்படி என்று தனக்குத் தெரியுமென எஸ்.பி. திசாநாயக கூறுகிறார்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 110 இடங்களில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் 17ஆம், 18ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் விவசாயிகள் மற்றும் மீனவர்கள் தொடர்பாக உள்ள பிரச்சினைகளுக்கு நீதி கோரி போராட்டங்களை நடத்த தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் அறிவித்துள்ளார்.

குற்றமற்றவர்களையும் சிறைக்குள் தள்ளி குற்றவாளியாக்கவும், குற்றம் சுமத்தாது வருடக் கணக்காக தடுத்து வைக்கவும் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திறந்த பொருளாதாரக் கொள்கைக்குப் பின்னர் நாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் அதிகரித்ததை நினைவுகூர்ந்துள்ள, சிவில் சமூகம் மற்றும் வெகுஜன அமைப்புகள் 1978ற்குப் பின்னர், ஏற்பட்ட பொருளாதார மற்றும் சமூக எழுச்சியுடன் சமூக ரீதியாக களங்கப்படுத்தப்பட்ட சிலர் நாட்டின் தலைசிறந்த அரசியல்வாதிகளாக மாறியுள்ளதாக  சுட்டிக்காட்டுகின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி