1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலங்கை மத்திய வங்கியின் 16ஆவது ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ரால், இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடமிருந்து, தனது நியமனக் கடிதத்தைப் பெற்றுக்கொண்டார்.

இந்த தொற்றுநோய் காலத்தில் இலங்கையில் உள்ள முதலாளிகளால் சுதந்திர வர்த்தக வலய (FTZ) தொழிலாளர்கள் மனிதாபிமானமற்ற முறையில் சுரண்டப்படுவது பற்றிய பல பரபரப்பான கதைகள், இங்கேயும் சுற்றி வளைத்து எமது கரைகளையும் தாண்டி பயணித்தன. இந்த கதைகள் பெரும்பாலும் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மற்றும் ஆடை துறை தொழிலாளர்கள் பற்றியது. கொழும்பிலும் கட்டுநாயக்கவிலும் உள்ள பல கூட்டணிகள் (சில தொழிற்சாலை தளங்களில் உண்மையான உறுப்பினர் அடிப்படை இல்லாமலும்) சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களின் துயரங்களை வெளிப்படுத்துகின்றன. இந்த கதைகள் பிராந்திய பிரச்சாரங்களில் சிக்கியுள்ளன, பிராந்தியத்தில் உள்ள பெரும்பாலான தொழிலாளர்கள் தற்போதைய தொற்றுநோய்க்கு மத்தியில் இதே போன்ற கஷ்டங்களையும் உயிருக்கு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர்.  

மனித உரிமைகளை பாதுகாக்கவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்கவும் மேற்கொண்ட முயற்சிக்கு இலங்கையை பாராட்டுவதாக சீனா தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பினை பெரும்பாலான தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என நீர்வழங்கல்துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் கொவிட் வைரஸிற்கு எதிராக சைனோபார்ம் தடுப்பூசி பெற்றுக் கொள்ள, இளைஞர் யுவதிகள் விரும்புவதில்லை என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்தியர் ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகள் ராஜாங்க அமைச்சர் கடந்த 12ம் திகதி இரவு அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அடாவடித்தனமாக நடந்து கொண்டுள்ளதாக தமிழ் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் ஜீ.ஜீ.பொன்னம்பலம் கூறியுள்ளார்.

மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான 'நீட்’ நாடு முழுவதும் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாடு முழுவதும் நீட் தேர்வில் 16 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழ்நாட்டை பொறுத்தவரை 18 நகரங்களில் 224 தேர்வு மையங்களில் நீட் தேர்வு நடைபெற்றது. இதில் 1 லட்சத்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர்.

யாழ்ப்பாணத்தில் பிறந்து, நோர்வேயில் வசித்து வரும் கம்ஷாஜினி குணரத்தினம் நோர்வே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

சகல விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லசித் மாலிங்க அறிவித்துள்ளார்.

அஜித் நிவாட் கப்ராலினால் 10.4 பில்லியன் தொடக்கம் 10.6 பில்லியன் ரூபா வரை நட்டம்! நியமனத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

இலங்கை தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் மிச்செல் பெச்சலட் வெளியிட்ட வாய்மொழி அறிக்கையை இலங்கை வெளி விவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் நிராகரித்துள்ளார்.

இந்த மாதத்துக்கான முதியோர் கொடுப்பனவு எதிர்வரும் 17 மற்றம் 18 ஆம் திகதிகளில் வழங்கப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் ஞாயிறு தொடர் தற்கொலை தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை வழக்கில் இருந்த விடுவிக்குமாறு அவரது சட்டத்தரணி விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதாவான் புத்திக ஸ்ரீ ராகல இன்று நிராகரித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்பட்ட உள்ளாடைகளை அணியாத காரணத்தினால் யாரும் மரணிக்கப் போவதில்லை என ஆளும் கட்சி அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சுவிடசலாந்தின் ஜெனீவா தலைமையகத்தில் இன்று (13) ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் 48வது கூட்டத் தொடரில் இலங்கை உட்பட சில நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுதல் சம்பந்தமான முன்னேற்ற அறிக்கை முன்வைக்கப்படவிருக்கிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி