1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் முதல் வருடத்தில் குறைந்தளவு பங்களிப்பை வழங்கிய பத்து மக்கள் பிரதிநிதிகளில் பாதி பேர் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

கெரவலபிட்டிய. யுதகனவி மின் உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனமொன்றிடம் ஒப்படைக்கும் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதில்லையென ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

காலி – கராப்பிட்டிய வைத்தியசாலையில் கோவிட் மற்றும் நிமோனியா காரணமாக 31 வயது மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த மருத்துவர் இரத்மலானை – யட்டோவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த தரிந்தி தில்ஷிகா என்பவர் என தெரிவிக்கப்படுகின்றது.

லொஹான் ரத்வத்த சிறைச்சாலைக்குள் நுழைந்து சண்டித்தனமாக நடந்துக் கொண்டமை குறித்து முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதியரசரான குசலா சரோஜினி நியமிக்கப்பட்டுள்ளார்.

யாழில் நினைவிடத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்காத நிலையில், நினைவிடத்துக்கு முன்பாக தான் நின்ற இடத்திலேயே சுடரேற்றிய போது அங்கு இருந்த பொலிஸார் அதனை தட்டி அணைத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தொழிற்சங்கத்தை அமைத்தமையால் நியாயமற்ற முறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர் குழுவை மீண்டும் பணியில் அமர்த்த உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பல அரசு மற்றும் தனியார் துறை தொழிற்சங்கங்கள் தொழில் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

இலங்கையில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட பழக்கப்பட்ட யானைகள் தனியாருக்கு சொந்தமானவை என்பது தெரியவந்துள்ளது.

இலங்கையில் பிரஜைகளின் தனிப்பட்ட தகவல்கள் ஏனையவர்களை சென்றடையும் அச்சம் காணப்படுகின்ற நிலையில், தனிப்பட்ட தரவுகளை பெறுவதை எளிதாக்கும் திட்டத்தை, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் ஆளுநராக செயற்பட்ட மைத்திரி குணரத்ன முன்மொழிந்துள்ளார்.

இலங்கையில் மூன்று தசாப்த கால யுத்தத்தை நிறைவு செய்த தருணத்தில், பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார்.

உலகத் தலைவர்கள் அனைவருமாகச் சேர்ந்து உலகின் மொத்த மக்கள்தொகையில் 70% பேருக்குத் தடுப்பூசி வழங்குவதாக உறுதியளிக்குமாறு அதிபர் பைடன் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் பல வளர்ந்த நாடுகளில் தேவைக்கதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதால், அவை வீணாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

நீதி பெற்றுக் கொடுக்கப்படாததால் தான் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்கள் சர்வதேசத்தில் போராட்டங்களை நடத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் (Vijitha Herath) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் – நல்லூரிலுள்ள திலீபன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்கு முயன்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டார்.

நாடு கடத்தப்பட்ட இரு இலங்கையர்கள் மீதான நடவடிக்கைகள் அரசியலமைப்புக்கு முரணானது என்றும் அவர்களுக்கு 10 மில்லியன் ஜென் இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் டோக்கியோ உயர் நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஐநா சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றைய தினம் உரை நிகழ்த்தினார்.ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருடன், கடந்த 19ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள், கடந்த சில தினங்களாக பேசுப் பொருளாகியிருந்தன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி