1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு சரியான தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறும் பட்சத்தில், பொது மக்களுடன் இணைந்து பௌத்த தேரர்களும் வீதிக்கு இறங்கும் காலம் வெகு தொலைவில் இல்லையென பௌத்த தேரர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர, 'உண்மையான தேசபக்தர்' என்ற கருத்தியல் அரசியல் திட்டத்தை தொடங்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

நாட்டில் பதிவு செய்யப்படாத மருந்துப்பொருட்கள் தொடர்பில் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

மராட்டிய மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் நேற்று மூன்று இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.மராட்டிய மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கனமழை கொட்டுகிறது. இதனால், மும்பை உள்ளிட்ட பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. குறிப்பாக ராய்காட் மாவட்டத்தில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. தொடர் மழையால், ராய்காட் மாவட்டத்தில் மூன்று இடங்களில் நேற்று  நிலச்சரிவு ஏற்பட்டது.

லாஃப் கேஸ் இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் லிட்ரோ கேஸிற்கு பற்றாக்குறை இருப்பதாகவும் எரிவாயு விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.

இலங்கையின் மீன் வளம் அழிவடைதற்கு  எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலில் இருந்த வெளியேறிய இரசாயன கசிவு காரணமல்ல எனவும், மாறாக நாடு முழுவதும் உள்ள கடலுக்கு அரசாங்கத்தால் திருப்பி விடப்பட்ட கழிவுநீர் அமைப்பே காரணமாக அமைந்துள்ளதாகவும் மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

பழகிப்பார், பாதிப்பேர் மிருக ஜாதிதான்,சந்தர்ப்பவாதிகளின் சுயநலங்களை அறிந்து கொள்வதற்கு, மனோகணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் போன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடுகள் நல்லதொரு சந்தர்ப்பத்தை தந்துள்ளன. சிக்கலில் மாட்டிக் கொண்ட சக நண்பர்களை மேலும் சிக்கலில் மாட்டி, அரசியல் குளிர்காய நினைக்கும்  மனநிலையில் செயல்படும் இவர்களது நடவடிக்கைகளால் பலர் கவலையடைந்துள்ளனர்.

இலங்கையில் அமுலில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற கருத்துடன் தம்மால் உடன்பட முடியாது என ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜாபருடனான உறவை துண்டித்து கொண்டதால் ஜாபர் என்பவர் நூரை கொலை செய்து உள்ளார்.பாகிஸ்தான் முன்னாள் தூதர் சவுகத் அலி முகதாமின் மகள் நூர் முகாதம் (27) செவ்வாய்க்கிழமை இரவு இஸ்லாமாபாத்தில் உள்ள அவரது வீட்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். சவுகத் அலி முகாதம்  தென் கொரியாவில் பாகிஸ்தானின் தூதராக இருந்துள்ளார். கஜகஸ்தானுக்கான பாகிஸ்தான் தூதராகவும் பணியாற்றியுள்ளார்.

நாட்டை விற்கவோ அல்லது இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ தான் ஒருபோதும் செயல்பட மாட்டேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி