சீனாவும் இந்தியாவும் எல்லையில் இராணுவ வீரர்களை குவிக்கின்றது!
லடாக் பகுதியில் சீன எல்லையில் இந்தியா மேலும் 50 ஆயிரம் இராணுவ வீரர்களை குவிக்கிறது.லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு சீனா இராணுவத்தினருக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய இராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியா-சீனா எல்லை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இதையடுத்து இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன.