1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்களின் உணவு தவிர்ப்பு போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்கின்றது.

இலங்கையில் இடம் பெற்ற போர்க்குற்றங்களுக்கு நீதி வேண்டி புலம்பெயர் தமிழ் ஆர்வலரால் பிரித்தானியாவில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதத்திற்கு நேற்றுடன் (08) பத்து நாட்கள் நிறைவு பெற்றுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் தொடர்பில் நீதி கிடைக்கும் வரை எதிர்வரும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளையும் கறுப்பு ஞாயிறாக பிரகடனப்படுத்துவதற்கு கத்தோலிக்க ஆயர் பேரவை தீர்மானித்துள்ளது.

இலங்கையில் இந்தியாவின் கடும்போக்கு பாரதீய ஜனதா கட்சி உருவாவது பற்றி மக்கள் அச்சப்படத் தேவையில்லையென்கிறார் அமைச்சரவைப் பேச்சாளர் ரமேஷ் பத்திரன.

இலங்கை மற்றும் நேபாளில் தாம் விரும்பும் வகையிலான ஆட்சியமைக்கும் திட்டம் குறித்து பாரதீய ஜனதா கட்சியின் சிரேஷ்ட தலைவர் அமித் ஷா அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார். இதனையடுத்து குறித்த பெயரில் இலங்கையில் ஒரு கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும், மக்கள் இது குறித்து அச்சப்படத் தேவையில்லையெனவும் இலங்கையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் அதிகாரமுள்ள தேர்தல் ஆணைக்குழு இது குறித்து முடிவெடுக்கும் எனவும் ரமேஷ் மேலும் விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உப்பு பாவனையின் உண்மையான பாதிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு, உலகம் பூராகவும் உப்பு பாவனை தொடர்பாக விழிப்புணர்வூட்டும் சர்வதேச வாரம் நேற்று முதல் மார்ச் 14-ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தினால் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் - செம்மணி இந்து மயானத்தில் சுமார் 5 கிலோ நிறை கொண்ட ஆபத்தான வெடி மருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த மிருகத்தனமான உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் 268 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அரசின் முக்கிய துறைகளின் கம்பியூட்டர்களில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ரயில்வே வாரியத்தின் 4 முக்கிய தலைமை அதிகாரிகள் அடங்கிய குழு சார்பில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்கு வங்காளத்தின் கல்கத்தா நகரில் ஸ்டிராண்ட் சாலையில் உள்ள 13 மாடிகள் கொண்ட  கட்டிடம் ஒன்றில் திடீரென நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.  இதுபற்றிய தகவலறிந்து, 8 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்றன. 

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் விசாரிப்பதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ள அனைத்து விடயங்களையும் நாம் நடைமுறைப்படுத்த மாட்டோம். அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன்படி ‘பொதுபலசேனா’ அமைப்பை நாம் தடை செய்ய மாட்டோம் என அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி