நாட்டில் இன, மதக் குழுக்களாக எந்தவொரு இனத்தவரும் தனியாக நடத்தப்படக்கூடாது ; ஒரே நாடு - ஒரே சட்டம் செயலணி எடுக்கவுள்ள நடவடிக்கை
இலங்கையில் இன மற்றும் மதக் குழுக்களாக, எந்தவொரு வகையிலும் எந்தவொரு இனத்தவரும் தனியாக நடத்தப்படக்கூடாது என்பதை தேசியக் கொள்கையாக்கி, சட்டமாக்குவதன் முக்கியத்துவம் குறித்து ஒரே நாடு - ஒரே சட்டம் குறித்த அரச தலைவரது செயலணி மற்றும் நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.