1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

13 ஆவது திருத்த சட்டம் என்பது ஒரு அத்திவாரம் என்பதனால் அதனை வைத்துக்கொண்டே நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு 20, 25 பேர் கொண்ட இராணுவ உப குழுவை நிர்வகிக்க முடியும் என்றாலும் கிராம சேவகர் பிரிவை கூட அவரால் நிர்வகிக்க முடியாது என தொல்லியல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் செனரத் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் எழுச்சி மூலமே இந்த அரசை விரட்டியடிக்க முடியும். சஜித் பிரேமதாச தலைமையில் மக்களுக்கான தொரு அரசு உருவாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார்.

வடகிழக்குப் பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நேற்று மாலை முதல் இன்று காலை வரை கன மழை பெய்துள்ளது. சென்னையின் பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. சென்னை உட்பட பல மாவட்டங்களுக்கு அதி தீவிர மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தவறான பொருளாதார விலைக் கட்டுப்பாட்டுக் கொள்கை மற்றும் கட்டுக்கடங்காத நிதி முறைகேடுகள் சந்தையில் மிகப்பெரிய எரிவாயு தட்டுபாட்டை உருவாக்கியுள்ளன என்று முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் கூறுகிறார்.

பேராசிரியர் கொல்வின் ஆர்.டி சில்வாவின் கருத்துப்படி, தற்போதைய அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதிக்கு மன உளைச்சல் ஏற்பட்டால் நாட்டைக் காப்பாற்றுவது கடினமானது என மூத்த ஊடகவியலாளர் விக்டர் ஐவன் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையில் விவாதிக்கப்படாமலேயே நீதி அமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் நீக்கப்பட்டு 'ஒரே நாடு ஒரே சட்டம்' ஜனாதிபதி செயலணியை நியமித்தமை கேலிக்கூத்தான செயல் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் ஏனைய காடுகள் விடுவிப்பு திட்டத்திற் கீழ் வெருகல் பிரதேசத்தில் ஏற்கனவே முன்னர் பயிர் செய்த 600 ஏக்கர் அளவிலான காணிகள் இம்முறை பயிர்ச்செய்கை மேற்கொள்வதற்காக மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.நீர்கொழும்பு, வத்தளை, ஜா-எல பிரதேசங்களில் உள்ள முத்துராஜவெல ஈரநிலத்திற்கு சொந்தமான 3,000 ஏக்கருக்கும் அதிகமான காணிகளை நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் சுவீகரிக்க எடுக்கப்பட்ட தீர்மானத்தை வலுவிழக்கச் செய்யுமாறு கோரி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் மற்றும் பல உலக நாடுகளில் கோவிட்-19 அச்சம் காரணமாக முகக்கவசம் அணிவது சிறார்கள் மத்தியிலும் பரவலாகக் காணப்படுகிறது. வைரஸுக்கு எதிரான ஒரு வகைப் பாதுகாப்பு வழங்குவதைத் தாண்டி, அவர்களின் நீண்ட நாள் வளர்ச்சிக்கு இது ஒரு சவாலாக இருக்கவும் வாய்ப்புள்ளதா?

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி