ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்து அரசாங்கத்தின் பக்கம் கட்சித் தாவிய டயானா கமகே என்ற 'கஞ்சா டயானா' வெறுமனே பிரித்தானிய குடியுரிமை கொண்டவர் மாத்திரமே எனவும் அவருக்கு இரட்டை குடியுரிமை இல்லை என்பது மாத்திரமன்றி போலி தேசிய அடையாள அட்டை, போலிப் பிறப்புச் சான்றிதழ் என்பவற்றை முன்வைத்தே இலங்கையில் கடவுச் சீட்டு பெற்றுள்ளதாகவும் இவர் மூன்று வெவ்வேறு பெயர்களில் நடமாடி உள்ளதாகவும் குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பிரித்தானிய குடியுரிமை கொண்டவர் என்ற தகவலை முதல் முறையாக 2020, ஒக்டோபர் மாதம் 25ம் திகதி இந்த செய்தியை எழுதும் கட்டுரையாளர் வெளியிட்டார்.