1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனை விடுவிப்பதில், ஐக்கிய மக்கள் சக்தி தீவிர கரிசனை காட்ட வேண்டுமென மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.

2020ஆம் அண்டுக்குரிய கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று வெளியிடப்படவுள்ளது. பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றவர்கள் இரண்டாவது டோஸாக மற்றொரு தடுப்பூசியைப் பெறவுள்ளனர்.

ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத் தவறியமை தொடர்பாக முன்னாள் பொலிஸ்மா அதிபர், பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் மூன்று மாதங்களுக்கு நோயைக் குறைக்கும் அபாயத்தைக் குறைக்கிறது என்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் மூலக்கூறு அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் நீலிகா மலாவிஜ் தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா அறிவித்துள்ளார்.

நாட்டை முழுமையாக முடக்கினால் பட்டினி மரணம் ஏற்படுமெனத் தெரிவித்த கடற்றொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இராணுவ சோதனைச் சாவடி இருப்பது எமது வசதிக்காகவே என்றும் அவர் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும், ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியின் பங்காளி கட்சிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை நாளை செவ்வாய்க்கிழமை அலரி மாளிகையில் இடம் பெறவுள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவுக்கு மற்றுமொறு இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைகளில் ஒட்சிசன் சிலின்டர் பற்றாக்குறை கிடையாது . தற்போதைய தேவைக்கு போதுமான அளவு ஒட்சிசன் சிலிண்டர்கள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளன. தேவையாயின் சிங்கப்பூர் நாட்டில் இருந்து ஒட்சிசன் சிலிண்டர்களை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மேலும் சில பகுதியில் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் உள்ள 234 சட்டசபை தொகுதிக்கும் கடந்த மாதம் (ஏப்ரல்) 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்து முடிந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆரம்பத்தில் இருந்தே திமுக முன்னிலை பெற்றது. தி.மு.க. கூட்டணி 158 இடங்களில் வெற்றி பெற்று வாகை சூடியது. தி.மு.க. மட்டும் 126 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.

மலையக மக்கள் முன்னணியில் இருந்து விலக்கப்பட்ட பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அருணாச்சலம் அரவிந்தகுமார் புதிய கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகி 20வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு அளித்து அரசாங்கத்தின் பக்கம் கட்சித் தாவிய டயானா கமகே என்ற 'கஞ்சா டயானா' வெறுமனே பிரித்தானிய குடியுரிமை கொண்டவர் மாத்திரமே எனவும் அவருக்கு இரட்டை குடியுரிமை இல்லை என்பது மாத்திரமன்றி போலி தேசிய அடையாள அட்டை, போலிப் பிறப்புச் சான்றிதழ் என்பவற்றை முன்வைத்தே இலங்கையில் கடவுச் சீட்டு பெற்றுள்ளதாகவும் இவர் மூன்று வெவ்வேறு பெயர்களில் நடமாடி உள்ளதாகவும் குற்ற விசாரணை பிரிவினர் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர். தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் டயானா கமகே பிரித்தானிய குடியுரிமை கொண்டவர் என்ற தகவலை முதல் முறையாக 2020, ஒக்டோபர் மாதம் 25ம் திகதி இந்த செய்தியை எழுதும் கட்டுரையாளர் வெளியிட்டார்.

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்துள்ள பின்னணியில், இலங்கையை சூழவுள்ள கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவிக்கின்றது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி