தொண்டமானின் இறுதிச் சடங்கில் சட்டத்தை மீற இடமளித்த பொலிஸாருக்கு பௌத்த அமைப்பு எதிர்ப்பு!
கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்க சுகாதார நிபுணர்கள் வழங்கிய ஆலோசனையை புறக்கணித்து, அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினரும் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பௌத்த அமைப்பு ஒன்று, தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் மக்களுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட பணத்தை மீளத் கையளிக்க வேண்டுமெனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.