1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மட்டக்களப்பு வாழைச்சேனை பொதுச்சந்தைப் பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றிலிருந்து நேற்று முன்தினம் வியாழக்கிழமை இரவு பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

43 வீதமாக இருந்த எமது உள்ளுர் உற்பத்தி தற்போது 7.5 வீதமாக மாறியுள்ளது. இந்த நிலையை மாற்ற வேண்டும் நிரந்தரமான விவசாயக் கலாசாரத்தைத் தேற்றுவிக்க வேண்டும். நிலைபேறான விவசாய உற்பத்தியில் முன்நோக்கிச் செல்வதற்கான ஆரம்பத்தில் தற்போது நிற்கின்றோம். நாங்கள் எங்களிடமிருந்து மறைந்த விவசாயக் கலாச்சாரத்தை மீளக் கொண்டு வர முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றோம் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் தெரிவித்தார்.

தடுப்பூசி மையங்களுக்கு செல்ல முடியாதவர்களுக்கு வீடு சென்று தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதுவரை தடுப்பூசி போடப்படாத இவர்களுக்கு தடுப்பூசி போடுமாறு அனைத்து பிராந்திய சுகாதார அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்தியர் சுதர்ஷனி பெர்னாண்டோபுல்லே கூறினார்.

இலங்கையின் ஆதிவாசி ஒருவர் முதல் முறையாக் கொவிட் 19 தொற்றினால் சிகிச்சை பயனளிக்காமல் நேற்று உயிரிழந்தார்.பண்டாரவளை அரசினர் மருத்துவமனையிலேயே, மேற்படி மரணம் பதிவாகி உள்ளது.

500 இலங்கை தொழிலாளர்களுக்கு இஸ்ரேலில் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக தொழில் அமைச்சர் கூறுகிறார்.பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி எழுப்பிய வாய்மொழி வினாவுக்கு பதிலளிக்கும் விதமாக ஆகஸ்ட் 06 வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இதனை தெரிவித்தார்.

பயங்கரவாதச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆசிரியரும் கவிஞருமான அஹ்னாப் ஜசீமை சந்திக்க அவரது சட்டத்தரணிகளுக்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பிறப்பிக்கப்பட்ட ”கடும் அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து மீட்கும் உத்தரவு” அமுல்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையில் தற்போது கொரோனா வைரசின் டெல்டா திரிபு மிக வேகமாக பரவ ஆரம்பித்துள்ளதாக ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு, ஒவ்வாமை பிரிவின் பிரதானி டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவிக்கிறார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே மற்றும் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மாணவர் ஒன்றிய தலைவர் அமில சந்தீப ஆகியோர் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

உயர் கல்வியைத் தனியார் மயப்படுத்தி ஒட்டு மொத்த  இலவசக்  கல்விக்கு வேட்டு வைக்கவும்,அதே போன்று கல்வித் துறையினை  ராணுவமயப்படுத்தவுமே கொத்தலாவல பல்கலைக் கழகச் சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற கோத்தா-மகிந்த ஆட்சி முன்நிற்கின்றது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி