1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வட அமெரிக்காவில் உள்ள அலாஸ்கா மாகாணத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

92 வகை பெற்றோல் ஒரு லீற்றர்  மூலம் அரசாங்கத்துக்கு 69 ரூபா இலாபம் கிடைக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறையில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவருக்கு இனந்தெரியாத நபர்களால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜப்பான் பாடகி சயாகா கன்டா (35). இவர் பிரோஸன் படத்தை  ஜப்பானில் மொழி பெயர்த்து பிரபலமானர்.  இவர் ஜப்பானின் பிரபல பாடகர் மாட்சுடா சீகோவின் மகள். கடந்த சனிக்கிழமை அன்று சப்போரோ திரையரங்கில் "மை பேர் லேடி" என்ற இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள இருந்தார். ஆனால், வெகு நேரம் கடந்தும் பாடகி சயாகா வரவில்லை. ரசிகர்களும் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டியிருந்தனர்.

மலையகத்தின் இருவேறு பகுதிகளில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி இன்று இருவர் உயிரிழந்துள்ளனர்.நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டெப்லோ பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி 67 வயதான வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிகரிக்கப்பட்ட எரிபொருள் விலைக்கு ஏற்ப பேருந்துக் கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டுமென தனியார் பேருந்து உரிமையாளர்களின் சங்கம் கூறுகிது.

வடமாகாண மீனவர்களின் போராட்டத்தையடுத்து இலங்கை கடற்படையினரால் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள சுற்றிவளைப்புகளில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுவிக்கக் கோரி தென்னிந்திய மீனவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரை போராடுவேன்,அதுவரை அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதில்லை என மூத்த தமிழ் அரசியல் தலைவர் ஒருவர் உறுதியளித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன், வடக்கு கிழக்கு மாகாணத்தில் சீனாவின் தலையீட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை அதிகரிக்குமாறு தொழிற்சங்கம் ஒன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் தம்மை சிங்கங்கள் என்று கூறிய தலைவர்கள், இன்று வெளிநாடுகளுக்கு சென்று பிச்சையெடுப்பதாக சிங்கள ராவய தெரிவித்துள்ளது.

மூன்று முன்னாள் ஆளுநர்கள் மற்றும் இரண்டு சிரேஷ்ட சட்டத்தரணிகள் அடங்கிய குழு தற்போது ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் கலந்துரையாடி வருகின்றது.

உர நெருக்கடியால் பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி அரசானக்த்தை வலியுறுத்தியுள்ளது.

இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் `தேர்தல் சீர்திருத்த மசோதா' தாக்கல் செய்யப்பட்டுள்ளது. `வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. தேர்தல் ஜனநாயகத்தையே காலி செய்யக் கூடிய அம்சமாகவும் இந்த மசோதா உள்ளது' என்கின்றனர் எதிர்க்கட்சி எம்.பிக்கள்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி