முன்னாள் பிரான்ஸ் அதிபர் சர்கோஸீக்கு 3 ஆண்டுகள் சிறை!
பிரான்ஸ் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை ஆஜரான முன்னாள் அதிபர் நீகோலா சர்கோஸீ மீதான ஊழல் வழக்கில் அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி உட்பட மேலும் இருவரை பணியிடை நீக்கம் செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.