1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களின் பங்களிப்புடன் கிழக்கிலிருந்து வடக்கே பயணித்த சமாதான ஊர்வலத்தை நீதிமன்றத் தடைகள் மற்றும் பாதுகாப்புப் படையினர் ஊடாக அச்சுறுத்தி தடுக்க இயலாது, ஆத்திரமடைந்த அரசாங்கம் பங்கேற்பாளர்களை சிறையில் அடைத்து, அவர்களது வாகனங்களை கைப்பற்ற முடியுமென பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளது. 

சர்வதேச மற்றும் உள்ளூர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட  விருது பெற்ற எழுத்தாளர் விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.”அர்த" என்ற பெயரில் இணையத்தில் சிறுகதையை வெளியிட்டு பௌத்தத்தை அவமதித்ததாக தெரிவித்து எழுத்தாளர் சக்திக சத்குமார சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச சாசனத்தின் கீழ்  2019 ஏப்ரல் முதலாம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இலங்கையில் பெரும்பான்மையானவர்கள் பாலினசேர்க்கையை அசிங்கமாக கருதுவது தீவிரமான விஷயம் என்று முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீ​ கூறுகிறார்.

போருக்குப் பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், கிழக்கு மாகாணத்தில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் இருக்கின்ற வேலை தனியார் முதலீட்டாளர்களுக்கு ஒப்படைக்கப்பட்ட நிலங்களிலிருந்து எதிர்பார்க்கப்படும் பல்லாயிரக்கணக்கான ரூபாய்களை அரசாங்கம் பெறவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

இலங்கையின் மனித உரிமைப் பதிவு ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 12 நாட்களில் பரிசீலிக்கப்படவுள்ள நிலையில் கொவிட் தொற்றினால் மரணித்த  உடல்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்படும் என்று இலங்கை பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் அரசுக்கு எதிரான விஷம கருத்துகளை பதிவிடுவதாகக் கூறி ஆயிரத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்குமாறு ட்விட்டர் நிறுவனத்தை கேட்டுக் கொண்டிருந்த மத்திய அரசுக்கு அந்த நிறுவனம் பதில் அனுப்பியிருக்கிறது.

நேற்று நாடாளுமன்றத்தில் COVID 19ஆல் உரிழப்பவர்களை மண்ணில் புதைக்கும் போது,  நீருடன் வைரஸ் கலக்குமா? என்ற வினா எழுப்பப்பட்ட போது " இல்லை. அப்படிப் பரவாது" என பதிலளித்திருந்தார் இராஜாங்க அமைச்சர் டாக்டர் சுதர்சனி.

P2P பேரணியானது இந்தியாவின் தூண்டுதலின் பேரில் நடந்த ஒரு விடயம் என்ற தகவல் வெளியாகியுள்ள அதேவேளை. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான போராட்டத்தின் ஆரம்பத்தில். பொத்துவிலில் வைத்து சாணக்கியன் சொன்ன கோரிக்கைகள் என்ன ? , பின்னர் பல விடயங்கள் அதில் சேர்கப்பட்டது. அதில் முஸ்லீம்களின் உடலை(ஜனாசாவை) இலங்கை அரசு எரிக்க கூடாது என்ற கோரிக்கை பின்னரே சேர்க்கப்பட்டது.

ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுக்கு 'அரசியல் அதிகாரத்தை' கைப்பற்ற அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசியவாத சக்திகள் மேற்கொண்ட முயற்சிகள் இப்போது விமல் – பசில் மோதலுக்கு வித்திட்டுள்ளது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி