முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக முஸ்லிம் மக்களுடன் தமிழ் கூட்டமைப்பு நிற்கும்!
ஜனாஸா தகனம் செய்யும் விடயத்தில் முஸ்லிம் மக்களுடன் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிற்கும் என்று வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக, வவுனியாவில் நேற்று இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.