கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம்கள் உடல்களை பலாத்காரமாக தகனம் செய்வதை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு கொண்டு செல்வேன்! இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக்
இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை வலுக்கட்டாயமாக அந்த நாட்டு அரசு தகனம் செய்து வருகின்ற விவகாரம், இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கு (Organization Islamic Cooperation) மிக விரைவில் கொண்டு செல்லப்படும் என இந்தியாவைச் சேர்ந்தவரும் தற்போது மலேசியாவில் வசித்து வருபவருமான இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் தெரிவித்துள்ளார்.