25 மாவட்டங்களுக்கும் இராணுவ அதிகாரிகளிடம் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளது!
கொவிட் -19 வைரஸை கட்டுப்படுத்துவதற்காக எனக் கூறி நாடு பூராவும் சகல நிர்வாக மாவட்டங்களுக்கும் 25 இராணுவ உயரதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இந்த நியமனங்களை ஜனாதிபதி செயலகம் வழங்கியுள்ளதுடன், அதற்காக இராணுவத் தளபதி பரிந்துரை செய்துள்ளார்.