காலி முகத்திடலில் 11 ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் போராட்டம்!
தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு - காலி முகத்திடலில் மக்கள் முன்னெடுத்துள்ள அமைதிப்போராட்டம் 11 ஆவது நாளாக இன்றைய தினமும் தொடர்கிறது.
தற்போதைய அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி கொழும்பு - காலி முகத்திடலில் மக்கள் முன்னெடுத்துள்ள அமைதிப்போராட்டம் 11 ஆவது நாளாக இன்றைய தினமும் தொடர்கிறது.
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தத்தின் ஊடாக தனது அதிகாரங்களை குறைத்துக்கொள்ள ஜனாதிபதி இணக்கம் தெரிவித்ததாக பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதியான மக்கள் போராட்டத்தை களியாட்டத்திற்கு ஒப்பிட்ட ‘ஸ்டேட் ஆஃப் தி நேஷன்’ நிகழ்ச்சி குறித்து பிரபல ஊடக நிறுவனமான தெரண ஊடக வலையமைப்பு மௌனம் கலைத்துள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான ஜனநாயக இடதுசாரி முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தில் இணைந்துகொண்டுள்ளார்.
இனம், மதம், அரசியல் வேறுபாடின்றி நாட்டை நேசிக்கும் பெரும்பாலான மக்கள் தற்போதைய ஆட்சியின் தவறை திருத்தி நாட்டை கட்டியெழுப்ப விரும்புகிறார்களே தவிர நாட்டை தோல்வியடைய செய்வதற்கு அல்ல.
இறுதிக்கட்டப்போரில், இராணுவத்தினரால் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட தனது உறவுகளுக்காக நீதிவேண்டி வடக்கில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல ஆகியோருக்கு எதிராக பயணத்தடை கோரி முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தின் 17 புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றுள்ளனர். இந்நிகழ்வு ஜனாதிபதி மாளிகையில் இன்று முற்பகல் 10.30 அளவில் இடம்பெற்றது.
இன மத பேதமின்றி முன்னெடுக்கப்பட்டுவரும் மக்கள் போராட்டத்தை குழப்புவதற்கு பலவாறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.
இந்நிலையில், நேற்றைய தினம் மாலை தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடப்பட்டமை பலரது வரவரப்பை பெற்ற போதிலும் பௌத்த தேரர் ஒருவர் அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
குறித்த தேரர் அங்கு நின்றவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போதிலும் முழுமையாக தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இலங்கை மக்களிடையே இனவாத சிந்தனைகளை தூண்டுவதன் மூலம் அரசியல் இலாபம் ஈட்டிய ஒரு தரப்பினர் மீண்டும் அதே ஆயுதத்தை கையில் எடுக்கும் நோக்கத்தில் செயற்பட்டுவருகின்றது.
எவ்வாறாயினும் இன்று இலங்கையர்களாக காலி முகத்திடலில் ஒன்று கூடியுள்ள மக்கள் தமது ஒற்றுமையை ஒரு போதும் விட்டுவிடக்கூடாது.
எத்தனை தடைகள் வந்தாலும் இலக்கை அடைய ஒற்றுமை இன்றியமையாதது. குழப்பக்காரர்களின் வெறுக்கத்தக்க பேச்சுகள் மக்களின் மத்தியில் முறுவலை ஏற்படுத்தலாம் அவற்றை கண்டுகொள்ளாது அல்லது சகித்துக்கொண்டு போராட்டத்தை முன்னெடுப்பதே வெற்றிக்கான வழி!
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகுமாறு கோரி காலிமுகத்திடலில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டம் 10 ஆவது நாளாகவும் தொடர்கிறது.