ஜனாதிபதி செயலகம் முற்றுகை! காலி முகத்திடல் பகுதி முற்றாக முடக்கம்!
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் ஆளும் கட்சிக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
நாடு எதிர்நோக்கும் மருந்துகளுக்கான நெருக்கடிக்கு உடனடியாக தீர்வு காணப்படாவிட்டால் அதிகமாக மரணங்களுக்கு வழிவகுக்கும் என இலங்கை மருத்துவ சபை ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பில் நியாயம் கோரி இன்று (9) நீர்கொழும்பு - கட்டுவபிட்டி தேவாலயத்திலிருந்து பேரணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காலை 6.30 மணிக்கு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற இடங்களில் ஒன்றான கட்டுவாபிட்டிய தேவாலயத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பேரணி 36 கிலோ மீற்றர்கள் பயணத்தின் பின்னர், தாக்குதல்கள் இடம்பெற்ற மற்றொரு தேவாலயமான கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தை பி.ப. 2.30 மணியளவில் வந்தடையவுள்ளது.
அதன் பின்னர் கொச்சிக்கடை புனித அந்தோனியர் தேவாலயத்தில் பி.ப. 3.00 மணிக்கு விஷேட வழிபாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
காலை 6.00 மணிக்கு பேரணி ஆரம்பிக்க முன்னர், கட்டுவாபிட்டி தேவாலய தற்கொலை தாக்குதல்களில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களது அடக்கஸ்தலங்களில் விஷேட ஆராதனைகள் இடம்பெறவுள்ள நிலையில் அதன் பின்னரேயே தேவாலயத்திலிருந்து பேரணி ஆரம்பிக்கப்படவுள்ளடு.
இந்த நடை பேரணியானது ' நியாயத்துக்கான பேரணி ' என பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சிக்கு மத்தியில் ஆபத்தான படகு பயணத்தை மேற்கொண்டு மேலும் நான்கு இலங்கையர்கள் இந்தியா, தனுஸ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசிடமிருந்து மக்களுக்கு நிவாரணப் பொதி!தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்கு 700 ரூபா அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக் கழிவுடன் புத்தாண்டு நிவாரணப் பொதியை மக்களுக்கு வழங்கு வர்த்தக அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.
இலங்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்போது அரசியல் நெருக்கடியாக மாறி வருவதாக சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்கள் ஜனாதிபதி உட்பட அரசாங்கம் பதவி விலகக் கோரி வீதியில் இறங்கியுள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சித்திரை புத்தாண்டுக்கு தலைநகரில் இருந்து சொந்த இடங்களுக்கு செல்ல எதிர்பார்த்துள்ளவர்கள் திங்கட்கிழமையின் பின்னர் செல்வதற்கு எதிர்பார்க்க வேண்டாம் என அகில இலங்கை தனியார் பஸ் போக்குவரத்து சேவை சங்கம் அறிவித்துள்ளது.
அரசாங்கத்தில் தற்போது அங்கம் வகிக்கும் 10 சுயாதினமாக செயற்படும் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்கும் இடையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் விசேட கலந்துரையாடல் இன்று (08) பிற்பகல் நடைபெற்றது.