1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதால் மக்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளை மறைப்பதற்காக வலுசக்தி அமைச்சர் கம்மன்பிலவிற்கும், பொதுஜன முன்னணியின் செயலாளர் சாகர காரியவசத்திற்குமிடையில் அரசாங்கம் மோதலை நிர்மாணித்துள்ளது. அதற்கு ஏமாற வேண்டாமென முன்னிலை சோஷலிஸக் கட்சியின் கல்விச் செயலாளர் புபுது ஜயகொட நேற்று (13) ‘திவயின’ பத்திரிகைக்கு அளித்த நேர்காணலின் போது கூறியுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக சட்டமா அதிபர் உயர்நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.

மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அத்துடன் முடிந்து விடக்கூடும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை 2 ஆம் திகதிவரை நீடிக்குமாறு சுகாதாரத்துறையின் உயர்மட்ட நிபுணர்கள் அரசிடம் பரிந்துரை செய்துள்ளனர். தற்போதுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நீடித்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேற் குறிப்பிட்ட பரிந்துரையை அரசும் தீவிர பரிசீலனையில் எடுத்திருக்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள இரு ஆடைத் தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு ஆடைத் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்த விடயத்தினை கரைச்சி பிரதேச சபை தவிசாளர் வேழமாலிகிதன் உறுதிப்படுத்தியுள்ளார்.

12 ஆண்டுகளாக இஸ்ரேலின் பிரதமராக செயல்பட்டுவந்த பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது.இஸ்ரேலில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் லிக்குட் கட்சி தலைமையிலான கூட்டணி 54 இடங்களில் வெற்றி பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் வறுமை ஒழிப்பது தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் இலங்கை திரும்பவுள்ளதாக அந்த கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச ஆகியோரை அசௌகரியத்திற்கு உட்படுத்தும் அந்த மறைகரம் எது என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில கேள்வி எழுப்பியுள்ளார்.

எரிபொருள் விலை உயர்வு என்பது ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசு எடுத்த முடிவு என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஷியான் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் எரிவாயு குழாயில் உடைப்பு ஏற்பட்டு வெடித்ததால் 12 பேர் உயிரிழந்தனர்.

எரிபொருள் விலையை அதிகரித்து மக்களை அசௌகரியத்திற்கு உள்ளாக்கியுள்ள அரசாங்கம் அதன் பழியை தனிநபர் மீது சுமத்த முயற்சிப்பது ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.

கடன் சுமையில் சிக்கித் தவிக்கும் இலங்கை ஐரோப்பிய சந்தைக்கான வரிச்சலுகை மற்றும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராட அளிக்கப்படும் உதவி ஆகியவற்றை இழக்கும் அபாயத்தை எதிர்நோக்குகிறது.

நீர்கொழும்பு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று கேட்டறிந்தார்.

இலங்கையில் தற்போதைய கொரோனா பரவலைக் திறமையாகக் கட்டுப்படுத்த ஆறு பரிந்துரைகளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவுக்கு இலங்கை மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அரசாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஆடம்பர வாகனங்கள் இறக்குமதி செய்வது நிறுத்தப்படவில்லையெனவும், பரிவர்தனையின் தன்மைக்கேற்ப கோரப்பட்ட வாகனங்களை இறக்குமதி செய்ய நேரிடுமெனவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி