கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவுக்கு தமிழ் அரசியல் கைதிகள் இரங்கல்!
முன்னாள் ஆயர் கலாநிதி இராயப்பு ஜோசப் ஆண்டகையின் மறைவுக்கு சிறையிலுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.தமது பெற்றோர், உறவினர்கள் ஊடாக குரலற்றவர்களின் குரல் அமைப்புக்கு தமிழ் அரசியல் கைதிகள் தெரியப்படுத்தியுள்ளனர்.