மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்: வாகனங்களுக்கு தீ வைப்பு, துப்பாக்கிச் சூடு, ஒரு மாவோயிஸ்ட் பலி!
சத்தீஸ்கர் மாநிலம், தந்தேவடாவில் துப்பாக்கிச் சண்டையில் ஒரு மாவோயிஸ்டை கொன்றுவிட்டதாக பொலிசார் கூறுகின்றனர். அதே நேரம், பிஜப்பூரில் ஒரு தண்ணீர் சுத்திகரிக்கும் ஆலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 5 வாகனங்கள் மாவோயிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்படுவோரால் கொளுத்தப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.