1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவு கிடைக்கும் என காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியுடன் செயற்பட்டு வருவதாகவும், யாரை ஆதரிப்பது என்பது தொடர்பில் தமது கட்சியின் அதியுயர் சபை இறுதித் தீர்மானத்துக்கு வரவில்லையென்றாலும், உச்ச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஆதரவளிப்பார் என நம்புவதாகவும் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு தெளபீக் எம்பி தெரிவித்துள்ளார்.
 
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் கட்சித் தலைவர் எம்.பி. ரவூப் ஹக்கீம் உள்ளிட்டோர் ஏற்கனவே இணைந்து செயற்பட்டுள்ளதால், சஜித் பிரேமதாசவுக்கு உயர் சபையின் ஆதரவு கிடைக்கும் என தேசிய அமைப்பாளர் எம்.எஸ்.தௌபிக் நம்பிக்கை தெரிவித்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி