1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 
Feature

மன்னார், உயிலங்குளம் பகுதியில் குற்றச் செயல் தொடர்பாக பொலிஸார் சந்தேக நபர்களை விசாரணை செய்வதற்காக வீடு தேடி சென்ற

Feature

  1. சொகுசு ஹோட்டல் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஐக்கிய அரபு இராச்சியத்தின் கெப்பிட்டல் இன்வெஸ்ட்மன்ட் எல்எல்சீ நிறுவனத்திற்கு நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் காணி வழங்கல்


ஐக்கிய அரபு இராச்சியத்தின் கெப்பிட்டல் இன்வெஸ்ட்மன்ட் எல்எல்சீ நிறுவனத்தால் முழுமையான நேரடி வெளிநாட்டு முதலீடாக 25 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தி ஹோட்டல் கட்டிடத்தொகுதியை நிர்மாணித்து நடாத்திச் செல்கின்ற கருத்திட்டத்திற்காகஇ தற்போது இலங்கை மின்சார சபையின் பொறுப்பிலுள்ளஇ மவூசகலே நீர்த்தேக்கத்திற்கு அண்மித்ததாக அமைந்துள்ள காணித்துண்டொன்றும்இ நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ள சிறிய தீவொன்றையூம் நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்காக கருத்திட்ட முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமையஇ ஏற்புடைய நிறுவனங்களின் உடன்பாடுகளைப் பெற்றுக்கொண்டுஇ முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக குறித்த கம்பனிக்கு அக்காணித்துண்டை நீண்டகாலக் குத்தகையின் அடிப்படையில் வழங்குவதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.

 

  1. சுற்றுலாத்துறையின் கூட்டு ஒத்துழைப்புப் பற்றிய புரிந்துணர்வூ ஒப்பந்தத்தை மேற்கொள்ளல்

சுற்றுலாத்துறையின் கூட்டு ஒத்துழைப்புப் பற்றிய புரிந்துணர்வூ ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்hக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ஜோர்ஜியன் நாட்டு சுற்றுலா நிர்வாக நிறுவனத்தில் அரச சட்டங்கள் தொடர்பான சட்ட அமைப்புக்களுடன் உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள புரிந்துணர்வூ ஒப்பந்த வரைபுக்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதற்கமையஇ குறித்த புரிந்துணர்வூ ஒப்பந்தத்தில் கையொப்பமிடுவதற்காக சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.

 

  1. பங்குடமை மற்றும் புதிய நிதியிடல் செயன்முறையின் மூலம் இலங்கையில் ஈரவலயத்தில் உயிர்ப்பல்வகைமையை ஏற்புடையதாக்கல் மற்றும் நிலைபெறுதகு காணி முகாமைத்துவத்திற்கான கருத்திட்டம்

ஈரவலயக் காணிகளுக்கு நிலவூகின்ற அதிக கேள்விஇ காடுகள் அழிவடைதல்இ காடழிப்பு மற்றும் காணி மண்ணரிப்புஇ துரித அபிவிருத்திச் செயன்முறைகள்இ படையெடுப்புத் தாவரங்களின் பரம்பல்இ நிலைபேறற்ற வகையிலான நிலப்பயன்பாடு மற்றும் விவசாய முறைகள்இ மழைவீழ்ச்சி மாற்றமடைதல் மற்றும் வெப்பமயமாதல் மற்றும் வரட்சியின் தாக்கங்கள் போன்ற காரணங்களால் குறித்த வலயத்தில் நிலவூகின்ற உயிர்ப்பல்வகைமை மற்றும் நீரேந்துப் பிரதேசங்கள் அழிவடைந்து போதல்இ மண்ணின் உற்பத்தி இயலுமைக்கும்;இ தேயிலைஇ இறப்பர் போன்ற போகப் பயிர்கள் மற்றும் பல்பருவப் பயிர்களின் நிலைபேற்றுத்தன்மைக்கும் பெருமளவில் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. அதனால்இ தேயிலைஇ இறப்பர் காணிகளுக்கு அண்மையில் காணப்படுகின்ற உயரிய உயிர்ப்பல்வகைமையூடன் கூடிய சிறிய காடுகளைப் பாதுகாப்பதற்கும்இ நிலைபேறான காணி முகாமைத்துவத்திற்கும் சரியான படிமுறைகளை மேற்கொள்வதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளன. அதற்கமையஇ சுற்றாடல் அமைச்சுஇ பெருந்தோட்ட அமைச்சு மற்றும் ஏனைய தரப்பினர்களுடன் இணைந்து அதற்காக தயாரிக்கப்பட்டுள்ள பங்குடமை மற்றும் புதிய நிதியிடல் செயன்முறையின் மூலம் இலங்கையில் ஈரவலயத்தில் உயிர்ப்பல்வகைமையை ஏற்புடையதாக்கல் மற்றும் நிலைபெறுதகு வகையான காணி முகாமைத்துவத்திற்கான கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலகளாவிய சுற்றாடல் வசதியளிப்பு மூலம் 04 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் மூலம் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியாஇ இரத்தினபுரிஇ கேகாலைஇ களுத்துறைஇ காலி மற்றும் மாத்தறை போன்ற ஆறு (06) மாவட்டங்களில் அரச-தனியார் பங்குடமை மற்றும் சமூகப் பங்குடமை மூலம் நடைமுறைப்படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள உத்தேசக் கருத்திட்டத்திற்காக குறித்த நிதி வசதியளிப்பைப் பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் சுற்றாடல் அமைச்சுக்கும் இடையில் ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்காக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.

 

  1. நீடித்த அணுப் பரிசோதனை தடைகளுக்கான உடன்படிக்கை நிறுவனத்தின் நிலையப் பரிசோதனையின் ஒருங்கிணைந்த களப் பயிற்சி – 2025 இற்கான இலங்கை வசதியளிப்புக்களை வழங்கல்


இலங்கை 1996.10.24 அன்று நீடித்த அணுப் பரிசோதனைத் தடைகளுக்கான உடன்படிக்கையில் கையொப்பமிட்டுள்ளதுடன்இ குறித்த உடன்படிக்கை ஏற்று அங்கீகரிப்பதற்காக 2023.06.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது ஏதேனுமொரு நாட்டில் அணுப் பரிசோதனைஃ அணு வெடிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நிலையப் பரிசோதனையை மேற்கொள்வதற்காக நீடித்த அணுப் பரிசோதனை தடைகளுக்கான உடன்படிக்கை நிறுவனத்தால் குறித்த உடன்படிக்கையின் ஐஏ ஆம் உறுப்புரைக்கமைய உறுதிப்படுத்திக் கொள்ளும் பொறிமுறையொன்று நிறுவப்பட்டுள்ளது. அதற்கான செயற்பாடுகள் மற்றும் பணிகளை மேற்கொள்வதற்கும்இ பரிசோதனை உபகரணங்கள் பற்றிய பயிற்சியை வழங்குவதற்காகவூம் ஒருங்கிணைந்த களப்பயிற்சி வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீடித்த அணுப் பரிசோதனை தடைகளுக்கான உடன்படிக்கை நிறுவனத்தின் இலங்கையின் தேசிய கேந்திர நிலையமாக புவிச்சரிதவியல் ஆய்வூ மற்றும் சுரங்கப் பணியகத்தால் ஒருங்கிணைந்த களப்பயிற்சிகள் - 2025 இற்கான இலங்கை வசதியளிப்புக்களை வழங்குமாறு வேண்டுகோள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வேண்டுகோளுக்கமைய மேற்கொள்ளப்பட்ட தகைமை மதிப்பீட்டுக்கமைய மாதுறுஓய தேசிய பூங்காவிற்கு அருகாமையிலுள்ள பிரதேசத்தில் குறித்த ஒருங்கிணைந்த களப்பயிற்சிகளை நடாத்துவது பொருத்தமான இடமெனக் கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமையஇ நிலையப் பரிசோதனையின் ஒருங்கிணைந்த களப்பயிற்சிகள் - 2025 இற்கான வசதியளிப்புக்களை இலங்கை மேற்கொள்வதற்காக வெளிவிவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகரித்துள்ளது.

 

  1. வெளிநாட்டவர்களிடமுள்ள இலங்கையின் கலாச்சார மரபுரிமைகளை மீண்டும் எமது நாட்டுக்குப் பெற்றுக்கொள்ளல்

யூனெஸ்கோ அமைப்பின் மூலம் 1970 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட கலாச்சாரச் சொத்துக்களின் சட்டவிரோத இறக்குமதிஇ ஏற்றுமதி மற்றும் உரித்துக்களை ஒப்படைத்தல் தடை செய்தல் மற்றும் தடுத்தல் பற்றி சமவாயத்தின் 7 மற்றும் 13 ஆம் உறுப்புரைகளுக்கமையஇ தற்போது காணப்படுகின்ற ஏதேனும் அரசுக்குச் சொந்தமான கலாச்சாரச் சொத்தொன்றை குறித்த அரசுக்கு மீள் ஒப்படைக்குமாறு கோருவதற்கான உரிமையூண்டு. அதற்கமையஇ காலனித்துவ ஆட்சிக்குட்பட்டிருந்த நாடுகளிலிருந்து கொண்டுவரப்பட்டுஇ தற்போது நெதர்லாந்து நாட்டின் அருங்காட்சியகங்களில் வைக்கப்பட்டிருக்கின்ற தொல்பொருட்களை மீண்டும் அத்தொல்பொருட்களின் சொந்த நாடுகளுக்கு ஒப்படைப்பதற்கு அந்நாட்டு அரசு தீர்மானித்துள்ளது. நெதர்லாந்திடமிருக்கின்ற அவ்வாறான 06 தொல்பொருட்கள் தொடர்பாக தொல்லியல் திணைக்களம் மற்றும் சுயாதீன ஆய்வாளர்களின் பங்குபற்றலுடன் மேற்கொள்ளப்பட்ட ஆய்வூக் கருத்திட்டத்திற்கமையஇ குறித்த தொல்பொருட்கள் அனைத்தும் காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இலங்கையிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பொருட்களென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த தொல்பொருட்களை மீண்டும் எமது நாட்டுக்குப் பெற்றுக் கொள்வதற்காக புத்தசாசனஇ சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சு இராஜதந்திர ரீதியான வேண்டுகோளை சமர்ப்பித்துள்ளது. அதற்கமையஇ அதுதொடர்பான தொடர் நடவடிக்கைகளுக்காகவூம்இ தற்போது பல்வேறு நாடுகளில் காணப்படுகின்ற இலங்கைக்குரிய தொல்பொருட்களை மீண்டும் எமது நாட்டுக்குப் பெற்றுக்கொள்வதற்கான செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்காகவூம் உத்தியோகத்தர் குழுவொன்றை நியமிப்பதற்காகவூம் புத்தசாசனஇ சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.

 

  1. உலகளாவிய காலநிலை பற்றிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக காலநிலை இடர்நிலைக்கு ஆளாகின்ற நாடுகள் மற்றும் அபிவிருத்தியடைந்து வருகின்ற சமமான கருத்துக்களைக் கொண்டுள்ள நாடுகளில் “காலநிலை நீதிக்கான ஒன்றியத்தை” உருவாக்கல்

உலகளாவிய காலநிலை பற்றிய உரையாடலில் காலநிலை இடர்நிலைக்கு ஆளாகின்ற நாடுகளுக்குத் தாக்கம் செலுத்துகின்ற தீர்மானம்மிக்க சில துறைகள் பற்றிக் கலந்துரையாடப்பட்டு வருகின்றதுடன்இ நட்டங்கள் மற்றும் இழப்பீட்டு நிதியமொன்றை தாபித்தல் பற்றி கடந்த காலநிலை பற்றிய உரையாடல்களில் அதிக கவனம் செலுத்தப்பட்டாலும்இ பல்வேறு காரணங்களால்இ குறித்த நிதியத்தைத் தாபிப்பதில்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால்இ நட்டங்கள் மற்றும் இழப்பீடுகளுக்கான நிதியொதுக்கீடுகளைத் துரிதப்படுத்துதல் மற்றும் மாற்று வழியானதும் மரபுரீதியானதுமான பொறிமுறைகளிலிருந்து விடுபட்ட அணுகுமுறையொன்றை வழங்கும் நோக்கில் ‘காலநிலை நீதிக்கான ஒன்றியம்’ தாபிப்பது பொருத்தமானதென இலங்கையால் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அத்துடன்இ காலநிலை ரீதியாக இடருக்குள்ளாகின்ற அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் அதன் பாதிப்புக்களைக் குறைத்தல் மற்றும் அவற்றைத் தழுவிக் கொள்வதற்கான தலையீடுகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஒட்டுமொத்த தீர்வூ முன்மொழிவூகளின் அவசியமான பகுதியாகஇ குறித்த நாடுகள் முகங்கொடுத்துள்ள கடன் நெருக்கடிகளைக் கருத்தில் கொண்டு ‘கடனுக்கான நீதியையூம்’ உள்ளீர்த்துக் கொள்வது பொருத்தமென்பதே இலங்கையின் கருத்தாகும். அதற்கமையஇ குறித்த முயற்சிகளை வென்றெடுப்பதற்காக காலநிலை நீதிக்கான ஒன்றியத்தைத் தாபிக்கும் நோக்கின் முன்மொழிபவராக சுற்றாடல் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.

 

  1. ளுரவநஉh ளுரபயச ஐனெரளவசநைள (தனியார்) நிறுவனம் (கிறீன் ஃபீல்ட் சீனி அபிவிருத்திக் கருத்திட்டத்திற்கு) நீண்டகாலக் குத்தகை அடிப்படையில் வவூனியா மாவட்டத்தில் காணி வழங்கல்


தாய்லாந்தின் ளுரவநஉh ளுரபயச ஐனெரளவசநைள கம்பனியால் 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டுடன் வவூனியாவில் கரும்பு பயிரிடலை மேற்கொள்வதற்காகவூம்இ சீனி உற்பத்தி தொடர்பான கருத்திட்ட முன்மொழிவொன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. உத்தேசக் கருத்திட்டத்தின் மூலம் இலங்கையின் சீனித் தேவையின் 20மூ (120இ000 மெட்றிக்தொன் சீனி) உற்பத்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கருத்திட்டத்திற்கான தொழிற்சாலை வளாகம் மற்றும் வசதிகளுக்காகஇ வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான பற்றைக்காடுகளைக் கொண்ட வவூனியா வடக்குப் பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள 200 ஹெக்ரெயார் காணித்துண்டு அடையாளங் காணப்பட்டுள்ளது. குறித்த காணித்துண்டை உத்தேசக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வழங்குவதற்கு வனப் பாதுகாப்புத் திணைக்களம் உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமையஇ முன்மொழியப்பட்டுள்ள கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக தேவையான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.

 

  1. கடனிறுக்க வகையின்மை (ஐளெழடஎநnஉல) பற்றிய சட்டங்களை மறுசீரமைப்பு செய்தல்

வாடிக்கையாளர் கடனிறுக்கவகையின்மை மற்றும் கூட்டிணைக்க முடியாத சிறு வியாபாரங்களின் கடனிறுக்க வகையின்மை பற்றிய ஏற்பாடுகள் 1853 ஆம் ஆண்டின் கடனிறுக்க வகையின்மை கட்டளைச் சட்டத்திலும்இ கம்பனிகளின் கடனிறுக்க வகையின்மை தொடர்பான ஏற்பாடுகள் 2007 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க கம்பெனிகள் சட்டத்திலும் உட்சேர்;க்கப்பட்டுள்ளன. குறித்த சட்டத்தின் கீழ் காணப்படுகின்ற ஏற்பாடுகள் சமகாலத் தேவைகளுக்குப் போதியளவின்மையால்இ புதிய ஒருங்கிணைந்த கடனிறுக்க வகையின்மை பற்றிய சட்டத்தை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமையஇ ஏற்புடைய தரப்பினர்களுடன் கலந்துரையாடி மூன்று மாதகாலப்பகுதியில் (03) அடிப்படை சட்டமூலத்தைத் தயாரித்து வழங்குவதற்கான அதிகாரத்தை நீதி ஆணைக்குழுவூக்கு ஒப்படைப்பதற்காக கௌரவ ஜனாதிபதி மற்றும் நீதிஇ சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.

 

  1. சமூகப் பாதுகாப்பு உதவூதொகை அறிவீட்டு (திருத்தச்) சட்டமூலம்

2022 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க சமூகப் பாதுகாப்பு உதவூதொகை அறவீட்டுச் சட்டத்திற்கான திருத்தங்கள் சிலவற்றை அறிமுகப்படுத்துவதற்கும்இ அதற்கான திருத்தச் சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்கும் 2023.01.30 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சமூகப் பாதுகாப்பு உதவூதொகை அறிவீட்டு (திருத்தச்) சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைத்துள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவூம் நிதிஇ பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.

 

  1. மத சுதந்திரத்தை இல்லாது செய்தல் மற்றும் மதம்சார் விடயங்களை திரிபுபடுத்தல்

மத சுதந்திரத்தைப் பாதுகாத்தல் மற்றும் மதத்தத்துவப் போதனைகளை இழிவூபடுத்தலைத் தடுப்பதற்கான சட்டரீதியான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த வேண்டிய தேவை மேலெழுந்துள்ளது. அதற்கமையஇ புத்தசாசனஇ சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனையைக் கருத்தில் கொண்டுஇ அதுபற்றிய விடயங்களை ஆராய்ந்து பரிந்துரைகளுடன் கூடிய அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்காக பௌத்தஇ இந்துஇ முஸ்லிம்இ கத்தோலிக்க மற்றும் கிறீஸ்தவம் போன்ற பிரதான மதங்களின் வணக்கத்தலைவர்கள்இ சட்டத்துறை நிபுணர்கள்இ உடகங்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களை உள்ளடக்கியதான குழுவொன்றை நியமிப்பதற்காக அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.

 

  1. 2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஆக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்கு சமர்ப்பித்தல்

2013 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கு எதிரான சமவாயச் சட்டத்தின் 34(1) ஆம் பிரிவின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சரால் தயாரிக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டின் 08 ஆம் இலக்க விளையாட்டில் ஊக்குப் பதார்த்த (தடைசெய்யப்பட்ட நிரல்) ஒழுங்குவிதிகள்இ 2329ஃ43 இலக்க 2023.04.27 ஆம் திகதிய வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த ஒழுங்குவிதிகளின் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.

 

  1. இந்து சமுத்திர எல்லை நாடுகளின் அமைப்பின் இலங்கைக்கான தலைமைத்துவம் 2023-2025

இந்து சமுத்திரத்தின் 23 எல்லை நாடுகளின் அங்கத்துவத்துடன் கூடிய இந்து சமுத்திர எல்லை நாடுகளின் அமைப்பின் தலைமைத்துவம் 2023 ஒக்ரோபர் மாதத்தில் குறித்த அமைப்பின் சமகால தலைமைத்துவத்தை வகிக்கின்ற பங்களாதேசத்திடமிருந்து இலங்கைக்கு ஒப்படைக்கப்படவூள்ளது. இவ்வமைப்பின் தலைமைத்துவம் வகிக்கின்ற காலப்பகுதியில் பிராந்திய மற்றும் உறுப்பு நாடுகளின் அபிவிருத்திக்காக பிராந்திய ஒத்துழைப்புக்களைப் பலப்படுத்துவதற்காக படிமுறைகளை மேற்கொள்ள வேண்டியூள்ளது. குறித்த பணிகளை வெற்றிகரமாக மேற்கொள்வதற்காக ஜனாதிபதி செயலகத்தின் சிரேஷ்ட உத்தியோகத்தர் ஒருவரின் தலைமையில் ஏற்புடைய அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் பிரிதிநிதிகளுடக் கூடிய தேசிய செயலணியொன்றை வெளிவிவகார அமைச்சின் கீழ் நிறுவூவதற்கும்இ இரண்டு வருட காலப்பகுதிக்கு செயலகமொன்றை நிறுவூவதற்கும் பாதுகாப்பு அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்களும் வெளிவிவகார அமைச்சர் அவர்களும் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.

 

  1. 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள ஒழுங்குவிதிகளைப் பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பித்தல்

நாட்டில் நிலவூகின்ற ஆரோக்கியமற்ற பொருளாதார நிலைமைகளால் வெளிநாட்டு நாணயக் கையிருப்பு மற்றும் நிதிச்சந்தையின் அடிப்படையில் அதிகரிக்கின்ற அழுத்தத்தைக் குறைப்பதற்காக தெரிவூசெய்யப்பட்ட ஒருசில பொருட்களின் இறக்குமதிக்கான தற்காலிகத் தடைகளை விதிப்பதற்கான ஒழுங்குவிதிகள் 1969 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க ஏற்றுமதி மற்றும் இறக்குமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த ஒழுங்குவிதிகளை தளர்த்துவதன் மூலம் சென்மதி நிலுவையின் மீது குறைந்தளவூ தாக்கத்தை ஏற்படுத்துகின்ற தெரிவூ செய்யப்பட்ட பொருள் வகைகளை இறக்குமதி செய்வதற்கான மட்டுப்பாடுகளை நீக்க வேண்டிய தேவை இலங்கை மத்திய வங்கி மற்றும் ஏனைய தொடர்புடைய தரப்பினர்களால் அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்கமையஇ தற்காலிக இறக்குமதிகளுக்கு தடைவிதிக்கின்ற அட்டவணையில் இயைபு முறைக் குறியீடுகளின் (Hளு ஊழனந) கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள 1இ216 ஆவதான பட்டியலிலிருந்து வகைப்படுத்தப்பட்டுள்ள இயைபு முறைக் குறியீடு 286 இனை நீக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்கான 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டு) ஒழுங்குவிதிகள் 2023.06.09 ஆம் திகதிய 2335ஃ26 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் வெளியிடப்பட்டுள்ளன. குறித்த ஒழுங்குவிதிகளுக்கான பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காக நிதிஇ பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

  1. அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் வேலைத்திட்டத்தின் மூலம் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மீட்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக உலக வங்கி ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளல்

2023 தொடக்கம் 2024 வரைக்கான 02 வருட காலத்திற்கு அபிவிருத்திக் கொள்கை நிதியிடல் வேலைத்திட்டத்தின் மூலம் பொருளாதார உறுதிப்பாடு மற்றும் மீட்பு வேலைத்திட்டத்தின் கீழ் உலக வங்கியின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த கலந்துரையாடல் 2023.05.17 ஆம் திகதி நடாத்தப்பட்டுள்ளது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டுக்கு 500 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்குச் சமமான விசேட பெறுகை உரித்து (ளுனுசு) 371.2 மில்லியன்களை 02 தவணைகளில் வழங்குவதற்கு உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தேச நிதி வசதிகளுக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஒப்புதல் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் உடன்பாடுகளும் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதற்கமையஇ குறித்த நிதி வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு உலக வங்கியின் சர்வதேச அபிவிருத்தி முகவர் நிறுவனத்துடன் (ஐனுயூ) ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக நிதிஇ பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

  1. சு+தாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையை நிறுவூதல்

சு+தாட்ட விளையாட்டுக்கள் மூலம் எதிர்பார்க்கப்படும் வரியை அறிவிடுதல்இ சு+தாட்ட செயற்பாடுகளுடன் தொடர்புடைய குற்றச் செயல்களைத் தடுத்தல்இ சு+தாட்ட விளையாட்டுக்கள் மூலம் ஆட்களுக்கும் சமூகத்திற்கும் இடம்பெறுகின்ற தீயவிளைவூகளைக் குறைத்தல் போன்ற பணிகளுக்காக அனைத்து சு+தாட்ட விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றவர்களுக்கு தாக்கம் செலுத்துகின்ற ஏற்புடைய வகையில் சு+தாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை எனும் பெயரிலான ஒழுங்குறுத்துகை நிறுவனமொன்றை தாபிக்க வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது. அதற்கமையஇ சு+தாட்ட விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்தல்; அதிகாரசபையை தாபிப்பதற்காக சட்டமூலமொன்றைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதிஇ பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

 

  1. பிராந்திய நீடித்த பொருளாதாரப் பங்குடமை பற்றிய உடன்படிக்கை மேற்கொள்ளல்

தென்கிழக்காசிய மன்றத்தின் (யூளுநுயூN) 10 உறுப்பு நாடுகள் மற்றும் சங்கத்தின் நாடுகளுடன் இதுவரைக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொண்டு பிராந்திய நாடுகளான அவூஸ்திரேலியாஇ சீனாஇ ஜப்பான்இ தென்கொரியா மற்றும் நியூ+சிலாந்து போன்ற 05 நாடுகள் இணைந்து நடைமுறைப்படுத்துகின்ற சுதந்திர வர்த்தக உடன்படிக்கையைஇ பிராந்திய நீடித்த பொருளாதாரப் பங்குடமை பற்றிய உடன்படிக்கையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த உடன்படிக்கையில் இணைந்து கொள்வதால் இலங்கைக்கு பொருளாதார ரீதியாகவூம் ஏனைய நன்மைகள் பலவற்றையூம் பெற்றுக்கொள்வதற்கு இயலுமையூண்டு. அதற்கமையஇ பிராந்திய நீடித்த பொருளாதாரப் பங்குடமை பற்றிய உடன்படிக்கையில் இணைந்து கொள்வதற்காக முறையான விருப்பத்தைத் தெரிவிக்கும் கடிதத்தை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியின் செயலாளருக்கு அதிகாரத்தை வழங்குவதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியூள்ளது.

 

  1. 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்திற்கு முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள்

நிலைபெறுதகு அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற ஆற்றல்கள் மற்றும் மீட்சித்திறன்களுடன் கூடிய வங்கித்துறையை பேணிச் செல்வதன் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டுஇ 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது. அதற்கமையஇ அடையாளங் காணப்பட்டுள்ள திருத்தங்களை உள்ளடக்கி 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தைத் திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்ட வரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிதிஇ பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ழூழூழூழூழூ
தமிழ்இ ஆங்கில மொழிபெயர்ப்புக்களுக்கிடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள மொழியே மூலமாக அமையூம்.

Feature

இந்து சமுத்திரத்தின் 23 எல்லை நாடுகளின் அங்கத்துவத்துடன் கூடிய இந்து சமுத்திர எல்லை நாடுகளின் அமைப்பின் தலைமைத்துவம்

Feature

உலகளாவிய காலநிலை பற்றிய நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக காலநிலை இடர்நிலைக்கு ஆளாகின்ற நாடுகள் மற்றும்

Feature

யுனெஸ்கோ அமைப்பின் மூலம் 1970 ஆம் ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்ட கலாச்சாரச் சொத்துக்களின் சட்டவிரோத இறக்குமதி,

Feature

தொலைவில் இருந்து பார்க்கும்போது இலங்கையின் அனைத்து இன மக்களை போன்று வெளிநாட்டவர்களுக்கும் இயற்கை வளத்துக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த மலை அழகாகத் தான் தெரிகிறது.

இதற்கு வெள்ளையர்கள் "பைபிள் மலை" என்று கூறினார்கள். ஆனால் அதில் அவர்கள் பைபிள் ஒன்றை வைக்கவில்லை. சிங்களவர்கள் " " பத்தலேகல" என்று பெயரிட்டார்கள். ஆனால் அவர்கள் அங்கு "பத்தல" (சீனிக்கிழங்கு) நடவில்லை.

இன்னும் பல்வேறு இனத்தினர் எவ்வாறான பெயர்களைச் சொல்லி அழைத்தாலும், இது வெறுமனே ஒரு மலைக்குன்று மாத்திரமே.

ஆனால் தற்போது இந்த மலையை அதாவது மலைக்குன்றை பௌத்த மலையொன்றாக மாற்றுவதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு பௌத்த தாழ்வு மனப்பான்மை என்றே கூற வேண்டும். காரணம், இந்த மலை அடிவாரத்தில் அதிக அளவு முஸ்லிம் மக்களை வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு மலையைப் பிடித்துக் கொண்டு பௌத்த மதவாதத்தை காண்பிக்காமல் மலையை மலையாகப் பாருங்கள் என்று ஜனாதிபதி அவர்கள் தெரிவித்து இருக்கிறார். அத்துடன், தேவையற்ற நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் இது வனவளத் திணைக்களத்துக்கு உரித்தானது என்றும் அவர் எடுத்துரைத்திருக்கிறார்.

ஆனால், தான் ஜனாதிபதிக்கும் மேலானவர் என்று நினைத்துக் கொண்டிருக்கும் புத்தசாசன அமைச்சின் செயலாளர், குறித்த மலையில் நிர்மாணப் பணிகளை மேற்கொள்வதற்கு பிரதேச சபை அனுமதி கிடைத்துவிட்டது என்று குறிப்பிடுகிறார்.

இவ்வாறானவர்களால் தான் இந்த நாட்டின் சுற்றாடல் காட்சி ஒருமைப்பாடு (visual integrity) காணாமல் போய் உள்ளது. மலையை மழையாகப் பார்க்காமல் அதனை அவர்கள் விகாரையாகப் பார்க்கிறார்கள். அல்லது வேறு ஒரு வழிபாட்டுத் தலமாகப் பார்க்கிறார்கள்.

யுனெஸ்கோ கொள்கையின் அடிப்படையில் சூழலியல் உண்மைத் தன்மையை அதாவது உண்மைத் தோற்றத்தை (authentic nature) மாற்றி அமைக்க முடியாது என்பது இந்த அரச அதிகாரிக்கு தெரியவில்லை. அவ்வாறு மாற்றியமைப்பது தவறு என்பதும் இவருக்கு தெரியவில்லை. இவர்களைப் போன்ற அரசு அதிகாரிகளால் 21 வது நூற்றாண்டை எப்படி கடப்பது என்பது கேள்விக்குறியே.

(சமூக வலைத்தளத்தில் இருந்து பிரதி எடுக்கப்பட்டது)

Feature

இலங்கை மின்சார சபையின் கட்டுப்பாட்டில் உள்ள மவுசாக்கலை நீர்த்தேக்கத்தை அண்மித்த காணி ஒன்றின் ஒரு பகுதியை ஐக்கிய அரபு எமீர் இராச்சியத்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கு நீண்டகால அடிப்படையிலான குத்தகைக்கு வழங்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது

மேற்படி நிறுவனத்தினால் அதி சொகுசு வாய்ந்த ஹோட்டல் ஒன்று நிர்மாணிப்பதற்காகவே இந்தக் காணி குத்தகைக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான அமைச்சரவை பத்திரம் ஜனாதிபதி அவர்களினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.

ஐக்கிய அரபு எமிர் இராச்சியத்தின் கப்பிட்டல் இன்வெஸ்ட்மென்ட் எல்எல்சி நிறுவனமே இதனை நீண்ட கால குத்தகைக்கு பெற்றுக் கொள்ள உள்ளது.

முழுமையான வெளிநாட்டு முதலீடாகவே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது. இதற்காக 25 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Feature

காலி, கராபிட்டிய பிரதேசத்தில் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கரவண்டி மீது பொலிஸார் அண்மையில் துப்பாக்கிச் சூடு

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி