போராட்டம் நடத்தி வந்த பிரபல சிங்கள நடிகை கைது!
ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் சிங்கள பிரபல நடிகை தமிதா அபேரத்னவை கொம்பனித்தெரு பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் சிங்கள பிரபல நடிகை தமிதா அபேரத்னவை கொம்பனித்தெரு பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு பாராளுமன்றில் இன்று மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அதன்படி, சட்டமூலத்திற்கு ஆதரவாக 91 வாக்குகளும் சட்டமூலத்திற்கு எதிராக 10 வாக்குகளும் கிடைக்கப்பட்டிருந்தது.
அதன்படி, 81 வாக்குகளால் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி சட்டமூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக ஊடகவியலாளர் தினித் சிந்தக கருணாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை உதைபந்தாட்ட நிறுவனத்தின் தற்போதைய நிர்வாகத்தின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த போதிலும்,அந்த அறிக்கையின்படி, நிறுவனத்தின் அரசியலமைப்பை திருத்திய பின்னர் இரண்டு மாதங்களுக்குள் உத்தியோகபூர்வ தேர்தலை நடத்த விளையாட்டு அமைச்சர் முடிவு செய்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரால் 37 இராஜாங்க அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மாநில அமைச்சர்களின் பட்டியல் வருமாறு:
ஜகத் புஸ்பகுமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு
ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி
லசந்த அழகியவண்ண – போக்குவரத்து
திலும் அமுனுகம – முதலீட்டு ஊக்குவிப்பு
கனக ஹேரத் - தொழில்நுட்பம்
ஜனக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
ஷெஹான் சேமசிங்க – நிதி
மோகன் பிரியதர்ஷன டி சில்வா – விவசாயம்
தேனுக விதானகமகே – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
பிரமித பண்டார தென்னகோன் – பாதுகாப்பு
ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகாரம்
அருந்திகா பெர்னாண்டோ – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
விஜித பேருகொட – பிரிவேன் கல்வி
லொஹான் ரத்வத்த - பெருந்தோட்ட கைத்தொழில்
தாரக பாலசூரிய – வெளிவிவகார
சனத் நிஷாந்த- நீர் வழங்கல்
இந்திக அனுருத்தா - சக்தி மற்றும் ஆற்றல்
சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள்
சாந்த பண்டார – ஊடகம்
அனுராதா ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் விவகாரம்
எஸ்.வியாளேந்திரன் – வர்த்தகம்
சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவம்
பியால் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில்
பிரசன்ன ரணவீர - சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தொழில் அபிவிருத்தி
டி.வி. சானகா - வனவிலங்கு மற்றும் வனப் பாதுகாப்பு
டி.பி. ஹேரத் – கால்நடை அபிவிருத்தி
சஷீந்திர ராஜபக்ஷ - நீர்ப்பாசனம்
டாக்டர். சீதா ஆரம்பேபொல – ஆரோக்கியம்
காதர் மஸ்தான் - ஊரக விவகாரங்கள்
அசோக பிரியந்த – உள்துறை
அரவிந்த் குமார் - கல்வி
கீதா குமாரசிங்க – பெண்கள் மற்றும் சிறுவர் விவகாரம்
சிவநேசதுரை சந்திரகாந்தன் – கிராமிய வீதிகள் அபிவிருத்தி
டாக்டர் சுரேன் ராகவன் - உயர் கல்வி
டயானா கமகே - சுற்றுலா
சாமர சம்பத் தசநாயக்க – ஆரம்ப கைத்தொழில்
அநுர பாக்குல் – சமூக வலுவூட்டல்
உலகளாவிய நிச்சயமற்ற தன்மை காணப்பட்ட போதிலும் உலக பொருளாதாரத்தில் இந்தியா தொடர்ந்து பிரகாசமான இடத்தில் திகழ்வதாக சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) தலைவர் Kristalina Georgieva பாராட்டியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கும் இடையில் இன்று பாராளுமன்றத்தில் கடும் வார்த்தைப் பரிமாற்றம் இடம்பெற்றது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்
கடந்த மே மாதம் 09ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் இல்லம் மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பில் 2 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் வாரத்திற்கு 1250 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வௌிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக இலங்கையர்களிடம் காணப்படும் ஆர்வம் அதிகரித்து வருவதாக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
தற்போது தட்டுப்பாடு நிலவும் 50 அத்தியாவசிய மருந்துகள் மற்றும் உபகரணங்களை அவசர கொள்முதல் முறையின் மூலம் கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இலங்கையின் கடன் மறுசீரமைப்பிற்கு அமெரிக்கா ஒத்துழைப்பு வழங்கும் என அந்நாட்டின் திறைசேரி செயலாளர் Janet Yellen தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.