1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 


ராஜபக்ச அரசுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி காலி முகத்திடலை நோக்கி முன்னெடுக்கப்பட்ட புத்த பிக்குகள் தலைமையிலான பயணம் புதிய நகர மண்டபத்திற்கு அருகில் நிறைவடைந்தது.
இந்த ஆர்ப்பாட்டம், காலி முகத்திடலில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஆர்ப்பாட்டத்தை குழப்பும் நேக்கில் முன்னெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

காலிமுகத்திடலில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுவரும்  இளைஞர்களின் கோரிக்கையின்  அடிப்படையில்  ராஜபக்ஷ வம்சத்தின் இளம் அரசியல்வாதியான முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவை பிரதமராக நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக அரசாங்கத்தின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அரசாங்கத்துடனும், ராஜபக்ஷர்களுடனும் இனி எவ்வித கொடுக்கல் வாங்களும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த நாட்டு மக்களுக்கு விசேட உரையை உண்மையில் அரசியல் தெரிந்தவர்களுக்கு என்றால் அந்த ஒரு கதையை விளங்கிக்கொள்ள முடியாமலில்லை. இன்று எங்களுடைய நாட்டில் இருக்கக்கூடிய இந்த நெருக்கடிக்கு முன்னால் ராஜபக்சக்களின் அடுத்த கட்ட ஏற்பாடு என்ன என்று மிகத் தெளிவாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 'அத தெரணவிடம்' தெரிவித்துள்ளார்.

தனது வாழ்நாளில் இவ்வாறானதொறு ஆட்சியை கண்டதுமில்லை கேட்டதுமில்லை என இலங்கையின் பழம்பெறும் பாடகி நந்தா மாலினி தெரிவித்தார்.

இலங்கையில் டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நாட்டில் சுகாதார அவசர நிலையை பிரகடனப்படுத்துமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அரசிடம் கோரிக்கையை முன்வைத்தது.

அரசுக்கு எதிராக கடந்த சனிக்கிழமை கொழும்பு - காலிமுகத்திடலில் ஆரம்பிக்கப்பட்ட மக்கள் போராட்டம்  5 ஆவது நாளாக இன்றும் தொடரந்து முன்னெடுக்கப்படுகிறது.


நாட்டின் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் அதிகாரத்தை அடைவதற்கான பிரத்தியேக கொள்கைகள் இருக்கலாம். ஆனாலும் நாட்டின் இளைஞர்கள் தானாக முன்வந்து பரிந்துரைகளை முன்வைக்கும்போது அதற்கு செவிசாய்ப்பது எமது கடமையாகும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டி வடக்கின் அரசியல் கட்சிகள் கூட்டாக அறிக்கை!நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் வரம்பற்ற அதிகாரங்களுடன் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்க வேண்டும் என வடக்கின் அரசியல் கட்சிகள் கோரிக்கை முன்வைத்துள்ளன.


ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அமைதியான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் மோதுவதற்கு இன்று (12) ராஜபக்ச ஆதரவு பிக்குகள் குழுவொன்று தயாராகி வருகிறது.

 தொடர் போராட்டத்தை கைவிடுமாறு கோரி நேற்றைய தினம் பிரதமர் மக்களுக்கு விசேட உரையாற்றி கேட்டுக்கொண்ட போதிலும் கொழும்பு - காலி முகத்திடலில் தற்போதைய அரசாங்கத்தை வீடு செல்லுமுாறு வலியுறுத்தி ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அமைதியான போராட்டங்களுக்கு செவிசாய்க்கா விட்டால் இது புரட்சியாக மாறும் - ரணில்!சிங்களப் புத்தாண்டுக்குப் பின்னர் இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு மேலும் வற்றிப் போகும் என் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 


இங்கிலாந்தின் 2019 ஆம் ஆண்டுக்கான ஒலிவர் விருது வழங்கல் விழாவில் இலங்கையின் ஹிரன் அபேசேகர சிறந்த நடிகருக்கான விருதை வென்றுள்ளார்.

நாட்டை  அழிவிலிருந்து மீட்டெடுப்பது நம் ஒவ்வொருவரதும் பொறுப்பாகும். அனைவரதும் பொறுமையும் தைரியமும் இச்சந்தர்ப்பத்தில் நாட்டிற்கு தேவையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து ஆற்றிய விசேட உரையில் தெரிவித்தார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி