1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தற்போதைய பாராளுமன்றத்திற்குள் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது என கூறியுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு பொதுத் தேர்தலுக்கு செல்வதே தற்போதுள்ள நெருக்கடியில் இருந்து மீள ஒரே வழி என தெரிவித்துள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட சில துறைகளுக்கு தேவைப்படும் எரிபொருளை தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கும் பெட்ரோலிய உற்பத்திச் சட்டத்தின் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இணை அமைச்சரவை பேச்சாளர், பெருந்தோட்டத்துறை அமைச்சர் கலாநிதி ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

தான் ஒரு போதும் பதவி  விலகத் தயாராக இல்லை என்றும், எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைக் காட்டினால் மட்டுமே பதவி விலகத் தயார் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.


கொழும்பு - காலி முகத்திடலில் “கோட்டா கோ கம“ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் மக்கள் போராட்டம் இன்று செவ்வாய்கிழமை 18 ஆவது நாளாகவும் தொடர்கிறது.

''அரசியலமைப்பு எவ்வாறு மாற்றப்பட்டாலும், அதிகாரப் பரவலாக்கம் முழுமையாக உள்ளடக்கப்பட வேண்டும். ” என மீன்பிடி அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.


இலங்கை அரசாங்கம் நிதியுதவி வழங்கும் போது ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதை கருத்தில் கொள்ள வேண்டும் என மலையகத்தில் உள்ள அரசியல் கட்சியொன்று சர்வதேச சமூகத்திடம் யோசனை முன்வைத்துள்ளது.

19வது மற்றும் 20வது திருத்தங்களில் இருந்து சாதகமான அம்சங்களின் அடிப்படையில் 21வது அரசியலமைப்பு திருத்தத்திற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணியாக இதுவரை, சமூக ஊடகம், குடும்ப நிலைமை உள்ளிட்ட முக்கிய காரணிகள் இருந்து வந்த நிலையில் இன்று அவை அனைத்தையும் மிஞ்சும் அளவில் நாட்டின் பொருளாதார நெருக்கடி தாக்கம் செலுத்தியுள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவாக 120 எம்.பிக்களை திரட்டியுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்பன்பில் தெரிவித்துள்ளார்.

இடைக்கால அரசாங்கத்தை அமைக்க தயார் எனவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எழுத்துமூலம் மகாநாயக்க தேரர்களுக்கு உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடல் ஆர்ப்பாட்டம் இன்றைய தினம் 17 ஆவது நாளாகவும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.


அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான அவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் தொடர்ந்தும் வைத்திருக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கும் நோக்கில் இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட கையெழுத்து நடவடிக்கை தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையின் கோரிக்கை குறித்து இலங்கை அதிகாரிகளுடன்  கடன் வழங்கும் திட்டத்திற்கான "பயனுள்ள தொழில்நுட்ப கலந்துரையாடல்களை" நடத்தியதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்துவதற்குத் தேவையான ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கு மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து, தேவையான நடவடிக்கைகளை விரைவில் எடுக்குமாறு, நாட்டில் உள்ள எட்டு முன்னணி வர்த்தக நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியுள்ளன.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி