1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் திரான் அலஸ் ஆகியோரை மீண்டும் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளுமாறு சனிக்கிழமை தம்மைச் சந்தித்த போது அழைப்பு விடுத்தார்.

நாட்டில் உச்சம் கண்டுள்ள மக்கள் போராட்டங்களுக்கு ஈடுகொடுக்க முடியாது ராஜபக்ஷ அரசு  திணறி வரும் நிலையில், அமைச்சரவை அமைச்சர்கள்  இராஜினாமா செய்வதாக அறிவித்து ராஜபக்ஷ அரசுக்கு புத்துயிர் அளிக்க முன்வந்துள்ளனர்.

அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது இராஜினாமா கடிதத்தை பிரதமரிடம் ஒப்படைத்துள்ளதாக தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.


சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் எதிர்கட்சியினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் பொலிஸாரால் நிறுத்தப்பட்டதையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண இணக்கப்பாடு அவசியம் - ஜெயசங்கர்எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரின் இணக்கப்பாடு அவசியம் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.


இலங்கையில் அசாதாரண சூழல் ஏற்பட்டுள்ளதால் இந்திய படைகள் நாட்டை வந்தடைந்துள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளில் உண்மையில்லை என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்யும் நோக்கில் மிரிஹானவில் நடத்தப்பட்ட போராட்டம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் குழுவை இலங்கை அரசின் பாதுகாப்புப் படையினர் கொடூரமாக தாக்கி சித்திரவதை செய்துள்ளனர்.


இன்று மாபெரும் போராட்டம் ஒன்றுக்கு நாடளாவிய ரீதியில் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அதனை நிறுத்துவதற்கான அனைத்து முன்ஏற்பாடுகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.

அரசாங்கத்தின் 50க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தற்போது விமல் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் இணைந்து சுயாதீனமாக செயற்படுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாக அரசாங்க உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதியின் தனிப்பட்ட இல்லம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சமூக ஊடக செயற்பாட்டாளரும், பல்கலைக்கழக மாணவருமான திசர அனுருத்த பண்டார, முதலில் காணாமல் போய் உள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் அவர் முகத்துவார காவல்நிலையத்தின் குற்ற விசாரணை பிரிவில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டனர்.

இலங்கையர்களுக்கு அமைதியான முறையில் எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது, இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இலங்கைக்கு சாதகமான பதில்!இலங்கை நிதியுதவி வழங்குவது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை வெகுவிரைவில் ஆரம்பிக்கவிருப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

மின் உற்பத்திக்காக இலங்கை மின்சார சபைக்கு (CEB) 6000 மெட்ரிக் தொன் எரிபொருளை வழங்க Lanka IOC நிறுவனம் முன்வந்துள்ளது.

அவசரகால பிரகடனத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும் - சுமந்திரன் ஜனாதிபதி, அவசரகால பிரகடனத்தை உடனடியாக மீளப் பெற வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி