1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 


புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையின் கீழ் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

19வது திருத்தத்தை நீக்கி புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வருவதில் பிரதமருக்கு விருப்பமில்லை என பாராளுமன்ற உறுப்பினர் மனோ தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்னர், ஆட்சியமைக்கக் கூடியவர்கள் குழுவொன்றை அரசாங்கத்தைக் கைப்பற்றுமாறு ஜனாதிபதி கூறியதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. ஆனால் அதற்கு யாரும் முன்வரவில்லை என்று தெரியவில்லை.


இலங்கையின் பொருளாதாரம் தீர்க்க கடினமான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகவும், எதிர்வரும் மாதங்களில் இதன் விளைவு இன்னும் மோசமாக இருக்கலாம் எனவும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

களுவாஞ்சிகுடி பொலிஸாரால் பெறப்பட்ட நீதிமன்ற உத்தரவின் மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


ஊழலையும் மோசடிகளை ஒழிப்பதற்காக சுதந்திரமான பலம் வாய்ந்த ஒரு சட்ட கட்டமைப்பை ஸ்தாபிக்க தமது ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ரம்புக்கனை நகரில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்த சம்பவத்தில், தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் திடீர் சுகயீனமுற்றுள்ளதாக நாடகம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். 

மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியில் இருந்து நீக்க வேண்டாம் என அரசாங்கத்தின் இரண்டு பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று நாடளாவிய ரீதியில் 1000 அதிகமான தொழிற்சங்கங்கள் அரசுக்கு எதிராக பாரிய பணிபுறக்கணிப்புக்கு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன.

 அரச, தனியார், அரை அரச, பொது மற்றும் தோட்டத் துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 1000க்கும் அதிகமான தொழிற்சங்கங்கள் அரசுக்கு எதிராக பாரிய அளவிலான வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன.

நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாயின் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் சிங்கள, முஸ்லீம் மக்களும் கலந்துகொள்ளவேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண தமிழ் அரசியல் கட்சிகள் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.

இலங்கையின் தற்போதைய அரசியல், பொருளாதார நெருக்கடி, வருங்காலத் திட்டம், தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக பிபிசி தமிழுக்கு இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பேட்டி அளித்துள்ளார்.


பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பதில் பதிவாளர் உட்பட பொறுப்பு வாய்ந்த மூவர் அரச சொத்துக்களையும், மனித வளங்களையும் துஷ்பிரயோகம் செய்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதோடு அவர்களுக்கு எதிராக பல்கலைக்கழகத்தின் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

சர்வதேச நிதி தரப்படுத்தல் நிறுவனமான Standard and poor’s (S&P), தெரிவு செய்யப்பட்ட கடனை திருப்பிச்செலுத்த தவறும் அபாயமுள்ள நாடாக இலங்கையை பெயரிட்டுள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி