1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணயின் 2022ம் ஆண்டுக்குரிய வருடாந்த தேசிய மாநாடு முல்லைத்தீவில் 20.02.2022அன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் ஏப்ரல் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு மூன்று வருடங்கள் நிறைவு பெறுகின்ற போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி நிலைநாட்டப்படுமா என்பதற்கான சாத்தியமே தென்படாத நிலையே காணப்படுவதாக “ரட்டே ரால” அமைப்பு தெரிவித்துள்ளது.

ரஞ்சனின் விடுதலைக்காக ஜெனீவா செல்லும் இரண்டு சகாக்கள்!ரஞ்சன் ராமநாயக்கவின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக  ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் 2022 பெப்ரவரி 28 திங்கட்கிழமை ஜெனீவா செல்லவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர்  ஹரீன் பெர்னாண்டோ  இன்று தெரிவித்துள்ளார்.



உலகின் பலமிக்க இராணுவ படைகளில் ஒன்றான ரஷ்ய படைகள் உக்ரைனை ஆக்ரோ‌ஷமாக தாக்கி வரும் நிலையில் தம்மை போருக்கு தூண்டி நாடுகள் மௌனம் காப்பதையிட்டு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வேதனை வெளியிட்டிருந்தார்.

அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான லஞ்ச ஊழல் தொடர்பான வழக்கினை தொடர்ந்தும் முன்னெடுத்து செல்வதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக் குழு தீர்மானித்துள்ளது.


கொரோனாவின் பின்னர் மீண்டுவரும் உலக நாடுகளின் புதிய கவலையாக உக்ரைன் -ரஷ்யா மோதல்கள் உள்ளன.
தனித்து போராடிவரும் உக்ரைன், உலகின் பலம் மிக்க இராணுவங்கள் வேடிக்கை பார்க்க தாம் தனித்து போராடிவருவதாக சாடியுள்ளார்.
இந்நிலையில் உக்ரைன் ஆக்கிரமிப்பை தடுத்தால் அணு ஆயுதத்தை ரஷ்யா கையில் எடுக்கும் என்கிற வகையில் ரஷ்ய ஜனாதிபதி புடின் மறைமுகமாக மிரட்டியுள்ளார்.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு நீதியை நிலைநாட்ட சர்வதேசத்தின் உதவியை நாடுவதைத் தவிர மாற்று வழியில்லையென இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது.

கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை செயற்படுத்துவதில் இலங்கை அசமந்தப்போக்கை கடைப்பிடிப்பதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் விசனம் வெளியிட்டுள்ளார்.

'ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்டோரை உதாசீனம் செய்து விசாரணையாளர்களை கைது செய்யும் அரசியலை நிராகரிப்போம்.' என, ரெடிக்கல் நிலையம் மக்களை வலியுறுத்துகிறது.

பாராளுமன்றத்திற்குள் டோர்ச் லைட்டை கொண்டு வந்தமை தொடர்பில் தமக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைக்கு முகங்கொடுக்க தயார் என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ சபையில் தெரிவித்துள்ளார்.நாட்டில் அமுல்படுத்தப்படும் மின்வெட்டுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் டோர்ச் லைட்டுகளுடன் நேற்று சபையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து மோதல்கள் தீவிரமடைந்தால் இலங்கையின் சுற்றுலாத்துறை மீண்டும் வீழ்ச்சியடையக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பெரிய மனி புதைகுழி தொடர்பான விசாரணைகள் மூன்று வருடங்களாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதனை மீண்டும் ஆரம்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


வடக்கில் 70 வீதமான நிலங்களை மகாவலி அதிகார சபையின் ஊடாகவும், வன இலாகா திணைக்களத்தின் ஊடாகவும் வன ஜீவராசிகள் திணைக்களத்தின் ஊடாகவும், தொல்பொருள் திணைக்களத்தின் ஊடாகவும் அபகரித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியான சார்ள்ஸ் நிர்மலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

 ஜனாதிபதி மக்களிடையே சென்ற போது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள “ரட்டே ரால“ அமைப்பு உண்மையில் ஜனாதிபதி மக்களிடையே செல்லுவது மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் எந்த பலனும் கிடையாது என தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு ஆதிக்கத்திலிருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு இரத்தம் சிந்தி உயிர் தியாகம் செய்த இந்த மண்ணின் மக்களை மரியாதையுடன் நினைவு கூறுவதாக மொனராகலையில் இடம்பெற்ற தேசிய மற்றும் மத நல்லிணக்கத்திற்கான மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் தேசபந்து கரு ஜயசூரிய தெரிவித்தார்.


அங்கு மேலும் உரையாற்றிய அவர்,


நாம் சுதந்திரமடைந்து 73 ஆண்டுகள் ஆகின்றது. நாம் சுதந்திரம் பெறும் சந்தர்ப்பத்தையும் இன்றைய நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மகிழ்ச்சி அடைய முடியுமா என்பது கேள்விக்குறியாகவே அமைந்துள்ளது.


நாம் சுதந்திரம் பெற்றதற்கு பின் சுதந்திரம் அடைந்த நாட்டவர் எம்மை விட முன்னேறி உள்ளனர். எமது நாட்டில் இடம்பெற்ற இன, மத, அரசியல் பாகுபாடுகள் மற்றும் பயங்கரவாதம் ஆகிய காரணங்களினால் நாட்டின் வளர்ச்சி பெருமளவில் பாதிப்புக்குள்ளானது.
இவற்றிற்காக தனி நபருக்கோ வேறு ஏதும் குழுவுக்கும் குற்றம் சுமத்த விரும்பவில்லை. அதில் பயனில்லை. நாட்டின் விடுதலைக்காக உயிர் தியாகம் செய்த மக்கள் வாழ்ந்த ஊவா மாகாணம் வளர்ச்சியில் பின்தங்கி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
கடந்தகால தவறுகளை உணர்ந்து தேசிய மற்றும் மத ஒற்றுமையின் ஊடாக ஜனநாயகம்மிக்க சுதந்திரமான சுபீட்சமான நாட்டை கட்டியெழுப்பும் நோக்கத்துடனே நாம் இங்கு வருகை தந்தோரம். நாம் எந்த ஒரு கட்சி சார்ந்தும் செயற்படவில்லை. எமக்கு இனவாத கொள்கைகளும் இல்லை. அனைத்து மதங்களும் சமாதானத்தையே போதிக்கின்றது.
இலங்கையின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டு அங்கு வாழும் மதத்தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளிடம் எமது இந்த உன்னத நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கு பக்கபலமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டோம்.
இந்த கலந்துரையாடலில் வேடர்களின் தலைவர் கலந்து கொண்டமை எமக்கு மாபெரும் சக்தியாகும். அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கும் நாம் செயற்படுவோம்.
ஏனைய உலக நாடுகள் போன்றே நாமும் பாரிய சவால்களை எதிர்நோக்கி உள்ளோம். கொரோனா தொற்று, பொருளாதார வீழ்ச்சி காரணமாக நாட்டு மக்கள் பாரிய சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். இத்தகைய சூழ்நிலையிலும் இன மற்றும் மத வன்முறைகளை தோற்றுவிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர்.
மீண்டும் நாட்டில் வன்முறைகள் ஏற்படாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் பிரதிநிதிகளுக்கும் இலங்கை வாழ் மக்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றோம். மதங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தையும் சகோதரத்துவத்தையும் ஏற்படுத்திக் கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
தற்போது காணப்படும் நெருக்கடிகளிலிருந்து நாட்டை காப்பாற்றுவதற்கு அனைத்து அரசியல் தலைவர்களும் கொள்கை ரீதியாக ஒன்று திரள வேண்டும். எமக்கு உலகில் தனித்து வாழ முடியாது. நாம் சர்வதேச மரியாதையையும் பெற வேண்டும். ஜனநாயகத்தையும் உரிமைகளையும் பாதுகாக்கும் நாட்டை தேடி சுற்றுலா பயணிகளும் முதலீட்டாளர்களும் வருவது உறுதியாகும்.
அனைத்து பிரஜைகளுக்கும் நட்புக்கரம் நீட்டும்மாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். இந்த விடயங்களை அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்றும் பிரார்த்திக்கின்றோம். என்றார்.

 jaffna w

 

14

தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.

15

15

https://bit.ly/3uHGkH6

16

 

17

18 19

20

21 22

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி