பொதுமக்கள் வாக்காளராகப் பதிவு செய்வதன் அவசியத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு சைக்கிள் பேரணி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. ஒன்லைன் மூலம் வாக்காளர் பதிவு இடம் பெறும் நிலையில், ஆயிரகணக்கானவர்கள் இன்னமும் பதிவு செய்யப்படவில்லை என எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கு மத்தியில் இந்த பேரணி இடம்பெற்றுள்ளது.
கடந்த 24 மாதங்களில் அரசாங்கம் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபா பணம் அச்சடித்துள்ளதாக பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன சபையில் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இன்று புதன்கிழமை, நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு பிரேரணையில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.
இவ்வாறு பணம் அச்சிடப்பட்டதன் விளைவாக நாட்டின் பணவீக்கமானது 16 வீதமாக அதிகரித்துள்ளதுடன் 25 வீத உணவு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன் நாட்டின் வங்கிக் கட்டமைப்பும் வெகு விரைவில் வீழ்ச்சி காணும் அச்சுறுத்தல் உள்ளதாகவும் எதிர்க்கட்சி உறுப்பினர் இரான் விக்கிரமரத்ன சபையில் இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
14
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
வட பகுதி மீனவர்களின் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வினை பெற்றுதர அரசாங்கம் தவறினால் ஜனாதிபதி அலுவலகத்தினையோ அல்லது ஜனாதிபதியின் இல்லத்தினையோ முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சுமத்துவதை போன்று உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து அரசாங்கம் எதனையும் மறைக்கவில்லை என அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பெப்ரவரி இறுதி வாரத்தில் ஆரம்பமாகவுள்ள மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத் தொடருக்கு முன்னதாக இலங்கை ஆதரவாக நாடுகளை ஒன்று திரட்டும் முயற்சியில் வெளிவிகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஈடுபட்டுள்ளார்.
நல்லாட்சியின் போது வெடித்த உயிர்த்த ஞாயிறு தொடர் குண்டுவெடிப்புகளுக்குப் நீதியைப் பெற்றுக்கொள்வதற்காக தற்போதைய ஆட்சியாளர்களை ஆட்சிக்குக் கொண்டுவருவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட இலங்கையின் கத்தோலிக்க தலைமைத்துவம், அதே இலக்கை அடைய வேறு ஒரு அரசாங்கத்தை நியமிக்க எதிர்பார்த்துள்ளது.
அடுத்த மூன்று மாதங்களுக்கு மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் முன்னதாக அறிவித்திருந்த போதிலும் நாட்டில் கிட்டத்தட்ட 5 மணி நேர மின்வெட்டை அமுல்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு ஒன்லைனில் விசாக்களை வழங்கும் இணையத்தளத்தில் மோசடி!இலங்கைக்கு விஜயம் செய்யும் வெளிநாட்டினருக்கு ஒன்லைனில் விசாக்களை பெற்றுக் கொள்வதற்கான குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை போன்று போலி இணையதளம் செயல்பட்டு வந்துள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் சமுதித சமரவிக்கிரமவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதா என்பதை அறிய அரச புலனாய்வு சேவை (SIS) யிடம் இருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களைத் தேடி ஐந்தாவது வருடமாகவும் தொடரும் போராட்டம்!படையினரின் வேண்டுகோளுக்கு இணங்க 13 வருடங்களுக்கு முன்னர் இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்த தமது உறவுகளைத் தேடும் போராட்டம் ஐந்து வருடமாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மின்சார பொறியியலாளருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை மூடிமறைக்கும் சிலரின் முயற்சிகளுக்கு அடிபணிய வேண்டாம் என இலங்கை மின்சார சபையின் தலைவரிடம் மின்சாரத்தை பயன்படுத்துவோர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. மின் பொறியாளர் மீதான குற்றச்சாட்டை மின் பொறியாளர்களே விசாரிக்க வேண்டும் என்று யாராவது முடிவு செய்தால், இனிமேல் பொறியியலாளர்களுக்கு எதிரான வழக்குகளை பொறியியலாளர்களே விசாரிக்க வேண்டும் என்றும் நீதிபதிகளால் விசாரிக்கப்பட வேண்டியதில்லை என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மின் பொறியியலாளர் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பான விரைவான விசாரணைகளை இறுதித் தீர்ப்பு வரும் வரை தொடருமாறு இலங்கை மின்சார சபையின் தலைவரை குறித்த சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ் லீடர் செய்திகளை வாட்ஸ்ஆப்பில் பெற கீழே உள்ள லிங்க் மூலம் இணையுங்கள்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் 16 பில்லியன் பாரிய நிதிமோசடி? - மறுக்கும் ஆழும் தரப்பு!மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கலகெதர முதல் பொத்துஹெர வரையான பகுதியின் நிர்மாணப் பணிகளில் எவ்வித ஊழல்களும் இடம்பெறவில்லை என்பதுடன், நிர்மாணப் பணிகளுக்கான டெண்டர் எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை என ஆளும் தரப்பு பிரதம கொறடா, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கை குறித்த குறிப்புக்களை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அடிப்படை உரிமை மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் குறித்து புதிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.