1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்குத் தயாராகுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அரசாங்க அதிகாரிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் பல நிறுவனங்களுக்குத் அறிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட நிறுவனங்களில் இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் சபை, போக்குவரத்து சபை  ஆகியவையும் அடங்கும்.
 
இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்தால் அதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக அரசாங்க அச்சகக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
 
மேலும், நாடளாவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களின் குறைபாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு அனைத்து கிராம உத்தியோகத்தர்களுக்கும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் .ஆர்.எம்.எல்.ரத்நாயக்க தெரிவித்தார்.
 
மேலும், அனைத்து மாவட்ட தேர்தல் அத்தாட்சி அதிகாரிகளும் தேவையான  பணியை மேற்கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.
 
தேர்தலுக்கு தயாராவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இதுபோன்ற அறிவுறுத்தல்களை வழங்கியதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.
 
ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 14 முதல் அக்டோபர் 16 வரை நடைபெறும் என தேர்தல் செயலகம் சமீபத்தில் அறிவித்தது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி