1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இன்று நள்ளிரவு முதல் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரதேசத்தை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகிறார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியானது மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி 8 ஆம் திகதி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.

பிரயாக்ராஜில் பிரபல மருத்துவர் மருத்துவமனையில் உதவியற்ற நிலையில் உயிர்துறந்த கதை"அலகாபாத் ஸ்வரூப்ராணி மருத்துவமனையில், எனது கணவர் 50 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார். அவர் பயிற்சி அளித்த பல மருத்துவர்கள் இதே மருத்துவமனையில் பணிபுரிகின்றனர். ஆயினும், இந்த கோவிட் வைரஸ் காரணமாக ஒரு மருத்துவர் கூட அவருக்கு சிகிச்சை அளிக்க வரவில்லை. என் கண் முன்னே அவர் உயிரிழந்தார். நான் ஒரு டாக்டராக இருக்கும்போதிலும், என்னாலும் அவருக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை."

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் Wei Fenghe எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.எதிர்வரும் 29 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர மீண்டும் கட்சியில் இணையுமாறு கோரியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதிய கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

தற்போது இலங்கை மத்திய வங்கி வழங்கும் அந்நிய செலாவணி விகிதங்கள் குறித்து உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களுக்கும் சந்தையில் உண்மையான பரிமாற்ற வீதத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதை lankatruth.com வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.

தமிழ் ஈழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இலங்கை அரசாங்கம் கொழும்பு துறைமுக நகர விடயத்தில் நாட்டின் சட்டங்களை தீவிரமாக புறக்கணித்துள்ளதோடு, அனைத்து மதங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பௌத்த அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

மாலியில் (மினுஸ்மா) ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் பணிக்கு தயாரான 243 பயிற்சி பெற்ற இராணுவ வீரர்களைக் கொண்ட இலங்கை இராணுவத்தின் புதிய அமைதிகாக்கும் குழுவினர், (21) அதிகாலை மாலி நாட்டிற்கு புறப்பட்டுச் சென்றனர்.

இடமாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்ட சம்மாந்துறையில் அமைந்துள்ள இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போ அவ்விடத்திலையே நிரந்தரமாக இருக்கச் செய்ய பல கட்ட நடவடிக்கைகள் பலதரப்பினராலும் மேற்கொள்ளப்பட்டிருந்தும் அவை வெற்றியளிக்காமையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிப்போவை அங்கையே நிரந்தரமாக வைக்க நடவடிக்கை எடுக்க கோரி சம்மாந்துறை இளைஞர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் அந்த சாலைக்கு அண்மையில் திரண்டு 09 நாட்களாக சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

சமூக ஊடகங்களில் வாரணாசியின் ஒரு புகைப்படம் கடந்த இரண்டு நாட்களாக வைரலாகி வருகிறது. ஒரு இ-ரிக்‌ஷாவில் அமர்ந்திருக்கும் ஒரு அபலைத் தாயின் காலடியில் உயிர்விட்ட மகனின் படம் அது. இந்தக் காட்சி, உண்மையிலேயே மனதை நொறுங்க வைக்கிறது. இன்னொரு விஷயம் இது பிரதமர் நரேந்திர மோதியின் தொகுதியில் நடந்துள்ளது. அதனால் இது வெகு விரைவிலேயே சமூக ஊடங்களில் வைரலானது. இதே சம்பவத்துடன் தொடர்புடைய இன்னொரு படமும் வைரலாகி வருகிறது.

நாட்டில் அரிசி மாபியாவை கட்டுப்படுத்த வேண்டுமாயின் வெளிநாட்டில் இருந்து குறைந்த விலையில் அரிசியை இறக்குமதி செய்வதே ஒரே வழிமுறையாகும். ஆனால் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ இதற்கு இடமளிக்க மறுக்கின்றார் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன சபையில் தெரிவித்தார்.

(மங்கள சமரவீரவின் பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 21) மங்கள சமரவீரவுடனான எனது கலந்துரையாடலில், ஓரினச்சேர்க்கை மற்றும் குடும்பம் குறித்த ஒரு ஆழமான விஷயத்தை மங்கள சுட்டிக்காட்டினார்.

Feature

உரிமைக்காக தமிழரசுக் கட்சி போராடி வருகின்ற நிலையில், முஸ்லிம் அரசியல் தலைமைகள் எமக்கு ஒரு முகமும் ஆட்சியாளர்களுக்கு ஒரு முகமும் காட்டுவது தமிழ்,முஸ்லிம் மக்களின் ஜனநாயக ரீதியாக பாரிய பின்னடைவுகளை சந்திக்க நேரிடும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

Feature

உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலுக்கு, இன்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. சுமார், 270 உயிர்களை அழித்தும் 500 பேருக்குக் காயங்களையும் ஏற்படுத்திய இந்தப் பயங்கரவாதத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இன்னமும் நியாயம் வழங்கப்படவில்லை என, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தொடர்ந்தும் கூறி வருகிறார்.  

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி